மே 2017 ராசி-பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த மே 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்



மேஷ ராசிக்காரர்களே, உங்கள் பலன்களை பற்றி அறியலாமா? 

கார்ய க்ஷேத்திரத்தில் மாற்றங்கள் வரலாம். நீங்கள் செய்யும் உழைப்புக்கு ஈடாக நன்மைகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளிடம் மரியாதையாக பழகவும். அவர்கள் ஆதரவு கட்டாயம் உங்களுக்கு தான். கார்ய சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். பதவி உயர்வு, மரியாதை, சன்மானம் ஆகியவைகள் வரும். குடும்பத்தில் நிம்மதி ஓங்கும். தார்மீக யாத்திரை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்க படலாம். குழந்தைகள் விஷயத்தில் நிதானம் கவனம் தேவை. விவாதம் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனோ விஞானம், ஆன்மிகம் போன்றவற்றில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் முன்னேறுவார்கள். வெளிநாட்டில் இருப்போருக்கு நல்ல நேரம். சகோதரர் மற்றும் நண்பர்கள் மூலமாக லாபம் பெறுவீர்கள். தன வரவு உள்ள மாதம் இது.

நெற்றியில் மஞ்சள் கலந்த சிகப்பு திலகம் எட்டு கொள்ளுங்கள்.

ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் இந்த மாதம் என்ன எதிர்பார்க்கலாம்?

செய்யும் தொழிலில் மாற்ற இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ வேண்டி வரும். தாய் உடல் ஆரோக்கியம் கெடலாம். சிலருக்கு வீடு மாற்றமும் இருக்கிறது. உங்கள் மன நிம்மதி கெடும். தூர தேச பிரயாணம் பண்ண நேரிடும். குழந்தைகள் படிப்பில், உடல் நலத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அடிக்கடி கோவம் வரலாம். நிலைமையை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தாம்பத்திய உறவில் சந்தோசம் நிலவும். பண வரவு அதிகம் இருந்ததால் உற்சாகமாக இருப்பீர்கள். மாணவர்களில் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வெளிநாட்டு பண வரவு இந்த மாதம் உள்ளது.

வெள்ளை நிற தித்திப்பு பண்டங்கள் உட்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் கொடுங்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எந்த விதமாக இருக்கும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

இந்த மாதம் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். தாம்பத்திய உறவில் நிம்மதியின்மை இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் காணலாம். பார்த்து பண முதலீடு செய்யுங்கள். தாயின் ஆரோக்கியம் கவலை கொடுக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தார்மீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். வீட்டில் மங்கள கார்யங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் மேலும் மேலும் வ்ருத்தி காண்பீர்கள். உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவர். வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு பிரமாதமான நேரம். கணவன்-மனைவி உறவில் நிதானம் தேவை. சகோதர சம்பந்தங்களுக்கு கஷ்டம் வரலாம்.

சிலருக்கு தொண்டை, வாய் போன்றவற்றில் பிரச்னைகள் வந்து விட்டு போகலாம். 

பூந்தொட்டிகளில் மற்றும் குளியலறையில் பச்சை நிற கற்கள் வையுங்கள். 

கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி?

இந்த மாதம் திடீர் தன லாபம் மற்றும் திடீர் நஷ்டம் உண்டாகும். ஏதாவது பெரிய இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு முன் பல முறை யோசியுங்கள். குடும்பத்தில் சந்தோசம் இருக்கும். தந்தைக்கு மிகவும் நல்ல நேரம். அவர் சப்போர்ட் உங்களுக்கு நிறைய கிடைக்கும். உங்கள் உடல் திடமாகவும், மனம் ஸ்திரமாகவும் இருக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். சிலருக்கு தூக்கமின்மை இருக்கலாம். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். தாயை பற்றி கவலையாக இருப்பீர்கள், ஆனால் தந்தையின் அந்தஸ்தில் கூடுதல் ஏற்படும். சிலர் விசாலமாகவும் அழகாகவும் வீடு வாங்குவார்கள். உங்கள் பராக்ரமத்தில் வ்ருத்தி காணலாம். 

ஏழை எளியோருக்கு, அதுவும் பெண்மணிகளுக்கு, பால் தானம் செய்தால் நல்லது. 

சிம்ம ராசிக்காரர்களுக்கு, என்ன மாதிரி பலன்கள் அமையும்?

இந்த மாதம் உங்களுக்கு வயறு சம்பந்த உபத்ரவங்கள் வரலாம். குழந்தைகளின் சுகத்திற்கு கெடுதல் வரலாம், ஆனால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சுகமாக இருக்கும். சிலர் கடன் வாங்குவார்கள். ராகுவின் ஜென்ம சந்திரன் மேல் சஞ்சாரம் உங்கள் ஆரோகியத்திற்கு கெடுதல் விளைவிக்கலாம். ஷேர் பாஜாரில் நல்ல லாபம் காண்பீர்கள். தந்தையுடன் சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படலாம். சிலர் தந்தை நலம் பற்றி கவலை கொள்வார்கள். உங்கள் பரிவாரகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிலவும். கூடப்பிறந்தோரிடம் உறவு கெட வாய்ப்புள்ளது. சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். இட மாற்றம் வாய்ப்பு உள்ளது. தன லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஆன்மீகத்தில் ஆழமாக இறங்குவீர்கள். வெகு தூர தார்மீக பிரயாணம் மேற்கொள்வீர்கள். செய்யும் வேலையை உற்சாகத்துடன் செய்வீர்கள். எதிரிகள் மீது உங்கள் ஆதிக்கம் பலமாக இருக்கும். 

சிகப்பு நிற காலணி மற்றும் ஆடைகள் உபயோகியுங்கள்.

கன்யா ராசிகர்களுக்கு என்ன நடக்குமென்று தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

இந்த மாதம் நீங்கள் உற்சாகமாக காரியத்தில் இறங்குவீர்கள். பாக்கியம் உங்களுக்கு கை கொடுக்கும். அடிக்கடி ஆன்மீக விசாரம் செய்வீர்கள். ஸ்பஷ்டமாக யோசிப்பீர்கள். உச்ச அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆவீர்கள். குழந்தைகளின் படிப்பு சீராக இருக்கும். ஆனால் மன உளைச்சல் அதிகள் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்த பிரச்னைகள் கிளம்பும். வீடு மாற்றம் இருக்கும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் உடனே கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லையானால், விஸ்வரூபம் எடுக்கும். வீடு சம்பந்த பிரச்னைகள் உங்களை திணற வைக்கும். தாய் உடல் நிலமை மோசமாகும், ஜாக்கிரதை. வியாபாரிகளுக்கு லாபமான சமயம். தாம்பத்திய உறவு மதுரமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. கூட பிறந்தோர் முன்னேறுவார்கள்.

மாட்டுக்கு பச்சை பயறு, பயத்தம்பருப்பு கொடுங்கள். 

துலா ராசிக்காரர்களே, உங்கள் இந்த மாத பலன் என்ன சொல்கிறதென்று பார்ப்போமா?

உங்கள் பராக்ரம் பளிச்சிடும். ரொம்பவும் உழைத்து செய்யும் வேலையில் பன்மடங்கு உயர்வீர்கள். பல வழியில் லாபம் சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் சொல்லமுடியாத அளவுக்கு ஆதாயம் காண்பார்கள். நீங்களும், உங்கள் தாயும் ஆன்மீகத்தில் இறங்குவீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் காட்டுங்கள். உடலில் காயம், அடி ஏற்படலாம். உங்கள் விவாஹ வாழ்க்கையில் பிரச்னைகள் கிளம்பலாம். செலவுக்கு சரிசமமாக பண வரவும் இருக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவு வராமல் தவிர்க்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல சமாச்சாரம் கிடைக்கும்.

வாசனை திரவம் உபயோகிக்கவும். 

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு எப்படி என்று அறியலாமா?

வீடு மாற்றம், வீட்டிற்கு உள்ளே மாற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். தாய், தந்தை ஆரோகியத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். இன்வெஸ்ட்மென்ட் விஷயத்தை பார்த்து கையாளுங்கள். வேலையில் மாற்றங்கள் உங்களுக்கு கட்டாயம் இந்த மாதம் இருக்கிறது. உச்ச அதிகாரிகளிடம், சக ஊழியர்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் பழகுங்கள். தாம்பத்திய விரைவில் குதூகலம் இருக்கும், ஆனால் வாழ்க்கை துணையின் சுகத்திற்கு கெடுதல் வரலாம். காதல் ஜோடிகளுக்கு ரொம்பவே நல்ல சமயம். கலை, மேனேஜ்மென்ட் போன்றவற்றில் உள்ள மாணவர்களுக்கு உகந்த சமயம். பாராட்டும் புகழும் பெறுவார்கள். ஆரோகியமாக இருப்பீர்கள்; எதிரிகள் ஓடி ஒளிவார்கள். நன்றாக உழைத்து உச்சிக்கு போவீர்கள்.

சிகப்பு நிற வஸ்திரம் ஏழை எளியோர்களுக்கு தானமாக கொடுங்கள்.

தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு எப்படி பட்ட பலன் இருக்கிறது என்று பார்ப்போமா?

வேலையில் மிக அதிகமாக உழைத்து முன்னேறுவீர்கள்; கூட பிறந்தோர், ஸ்நேகிதர்கள் சஹயோகம் கிட்டும். தந்தையின் ஆரோக்கியம் கெடும்; உங்கள் கவலைக்கு முக்ஹய்ய காரணமாகவும் இருக்கும். நீங்கள் தூரதேச பிரயாணம் செய்வீர்கள். உங்கள் பராக்கிரமம் எளிதாக புலப்படும். கார்ய க்ஷேத்திரத்தில் மிக அதிகமாக செயல் திறனை காண்பித்து வெகு தூரம் செல்வீர்கள். பதவி உயர்வு, பண உயர்வு, கௌரவம், புகழ் எல்லாம் உங்கள் வேலை செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கின்றன. உங்கள் தாய் பேரும் புகழும் பெற்று சந்தோஷமாக இருக்கும் நேரமிது. நீங்கள் புது வீடு, வாஹனம் வாங்குவீர்கள். குடும்பத்தோர் அமைதியாகவும், திருப்தியாகவும் இருப்பார்கள். தந்தைக்கு நற்பேர் கிட்டும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்; நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடைவார்கள்.

வாழை மரத்திற்கு பூஜை செய்யுங்கள். 

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம் எந்த விதமான ப்ரபாவத்தை கொண்டு வரும்?

வேலை சம்பந்த விஷயங்களில் பிசியாக இருப்பீர்கள். பார்ட்னெர்ஷிப்பில் செய்யும் எந்த வேலையும் ஒரு நல்ல திருப்பம் கொடுக்கும்; விட வேண்டாம். பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உடல் நலத்தை புறக்கணிக்காதீர்கள். புது வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. திடீர் பண வரவு அல்லது நஷ்டம் ஏற்படலாம். வரவும் செலவும் சரியாக இருக்கும். தந்தையின் ஆன்மீக வளச்சிக்கு உகந்த நேரம் இது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கு பங்கம் வரும். உங்களில் சிலர் சமூக சேவையில் இறங்குவீர்கள்; வேறு சிலர் தார்மீக யாத்திரை மேற்கொள்வீர்கள். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தன லாபம் இருக்கும். வீடு மனை வாங்குவீர்கள்.

சனிக்கிழமை தோறும் பைரவருக்கு பூஜை செய்யுங்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன் கிடைக்கும்?

செய்யும் தொழிலில் மும்முரமாக உழைக்கும் நேரம் இது. பன் மடங்கு லாபம் வரும். பாராட்டும் நல்ல பெயரும் கிட்டும். எளிதாக எல்லா வேலையும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்யணும் என்ற எண்ணம் இந்த மதம் மேல் ஓங்கும். உடல் திடமாகவும், மனம் உல்லாசமாகவும் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் நிலவும். ஏதாவது புது வியாபாரம் ஆரம்பிக்கும் முன் நிறைய தடவை யோசியுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம்; ஜாக்கிரதையாக கையாளவும். பண வரவில் குறைவிருக்காது. தாய் தந்தையின் உடல் நிலை நன்றாக இருக்கும்; அவர்கள் ஆதரவு நிச்சயம். தைர்யமாக காரியத்தில் இறங்கி அதி வேகமாக செய்து முடிப்பீர்கள். சிலர் வீடு வாங்குதல், புதுப்பித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

பக்ஷிகளுக்கு, அதுவும் ஸ்பெஷலாக காக்கைகளுக்கு, உணவு கொடுங்கள். 

மீன ராசி நேயர்களே, வாருங்கள். உங்கள் இந்த மாத பலன் என்னவென்று பார்ப்போமா?

செய்யும் வேலையில் கடினமாக உழைப்பீர்கள். சிலருக்கு வேலை மற்றம் இருக்கலாம். வேறு சிலருக்கு விவாஹம் போன்ற மங்களகரமான சமாசாரம் நடக்கலாம். விவாக வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். கூட பிறந்தோர் சந்தோஷமாக வாழ்வார்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். உங்கள் ஆன்மீக மார்கத்தில் ஆர்வம் பன்மடங்கு அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும் பாக்கியம் இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி இருந்தாலும், சிற்சில சண்டைகள் வரத்தான் வரும். பார்த்து கையாளுங்கள். சிலருக்கு வேலையில் பண உயர்வு, பதவி உயர்வு கிட்டும். எல்லா கார்யமம் தைர்யமாக செய்து முடிப்பீர்கள். பாக்கியம் நிறைய விஷயத்தில் கைகொடுக்கும். தந்தை வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்க விருக்கிறது. நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் தூர பிரயாணம் நன்மை செய்யும். 

உடலில் எந்த விதமாகவும் மஞ்சள் கயறு அல்லது தங்கம் சேர்த்து கொள்ளுங்கள்.
Read More »

ஏப்ரல் 2017 ராசி-பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஏப்ரல் 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்


மேஷ ராசிக்காரர்களே, உங்கள் பலன்களை பற்றி அறியலாமா?

ஒன்பதாம் வீட்டு சனியின் மூலம் நீங்கள் ஏதாவது தார்மீக, ஆன்மீக யாத்திரை செய்யலாம்.உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் சிறிது விரக்தி ஏற்படலாம். ஆனால் தந்தையில் உடல் ஆரோகியதில் மிக அதிக கவனம் தேவை. வேலை சம்பந்தமாக நீங்கள் வெளியூர் பிரயாணம் செய்யலாம். ஐந்தாம் வீட்டு ராஹுவினால் குழந்தைகளுக்கு பிரச்னைகள் வரலாம்; அல்லது குழந்தைகளாலும் வரலாம். ஆறில் உள்ள குரு செய்யும் வேலையில் ப்ரமோஷன் தரும். சுப விரயம் உண்டாகும். கேதுவின் 11ஆம் வீடு சஞ்சாரம் தன லாபத்தை குறிக்கிறது. சுக்கிரன்-சூர்யன் 12இல் இருப்பது வாழ்க்கை துணையின் கார்ய க்ஷேத்திரத்தில் திடீர் என்று உதவலாம்.


சிகப்பு நிற ஆடைகளை நிறைய பிரயோகம் செய்யவும்.


ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் இந்த மாதம் என்ன எதிர்பார்க்கலாம்?

அஷ்டம சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள்; எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஐந்தில் உள்ள குரு மனதில் நிம்மதி கொடுக்கும்; குழந்தை ஆசை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், அவர்களது ஆசை பூர்த்தி ஆகும். ராகுவின் 4ஆம் இட கோச்சாரம் குழப்பம் உண்டாக்கும்; மன கஷ்டம் கூட இருக்கும். தாயின் ஆரோகியத்திற்கு அசௌகரியம் ஏற்படலாம். சிலருக்கு வீடு மாற்றம் கூட இருக்கலாம். கேதுவின் 10ஆம் இட சஞ்சாரம் வேலை மாற்றம் கொடுக்கலாம். கூட வேலை செய்பவர்களிடம் அன்புடனும், மேல் அதிகாரிகளிடம் மரியாதையுடனும் நடந்து கொள்ளவும். புதன், செவ்வாய் 12இல் இருப்பதால் செலவு அதிகரிக்கலாம். சுக்கிரன்-சூர்யன் 11இல் பல விதத்தில் லாபம் கொடுக்கும். சமூகத்தில், வேலை செய்யும் இடத்தில் மரியாதை மற்றும் நல்ல பெயர் கட்டாயம் கிடைக்கும்.

உடலில் எந்த ரூபத்திலும் வெள்ளி அணிந்தால் நன்மை உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எந்த விதமாக இருக்கும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

சனியின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் காரணமாக தூர தேச பிரயாணம் செய்ய நேரிடலாம். பாக்கியம் கை கொடுக்கும். வாழ்க்கை துணைக்கு எதாவது பிரச்சனை வரலாம்; அல்லது உடல் ஆரோக்கியம் கெடலாம். வியாபாரத்தில் நல்ல திருப்பமோ மாற்றமோ வரலாம். ராகுவின் 3ஆம் வீட்டு கோச்சாரம் தைர்யம் தரும்; எடுத்த காரியத்தை முடிக்க உதவும். குருவின் 4ஆம் இட சஞ்சாரம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க உதவும். தாய்க்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஜாஸ்தி ஆகலாம். செய்யும் தொழிலில் விருத்தி உண்டாகும். கேதுவின் 9ஆம் இட சஞ்சாரம் உங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள உதவும். தந்தையின் ஆரோகியத்தில் கவனம் தேவை. சூர்யன்-சுக்கிரன் 10ஆம் இட சஞ்சாரம் உத்யோகத்தில் பெரிய பதவி வகிக்க வழி செய்யும். செவ்வாய்-புதன் 11இல் சேர்க்கை லாபத்தை காண்பிக்கிறது. நீங்கள் புது வீடு மற்றும் வாஹனம் வாங்கவும் நல்ல நேரம்.


பச்சை நிற பாட்டில் அல்லது மண் தொட்டியில் மனி பிளான்ட் வைத்தால் உங்களுக்கு நல்லது.

கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் எப்படி?

சனியின் ஆறாவது இட சஞ்சாரம் விரோதிகளை அடக்கும். உங்கள் கார்ய க்ஷேத்திரத்தில் நீங்கள் நன்றாக உழைத்து முன்னேறுவீர்கள். ராகு 2இல் இருப்பது கண் நோய், பண தட்டுப்பாடு போன்றவற்றிற்கு பிரச்னைகள் உண்டாக்கும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை; தப்பெண்ணம், தவறாக புரிதல் மூலம் வேற்றுமை உண்டாகும். எப்பவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். அவசர முதலீடு ஆபத்தில் முடியும். சிலருக்கு வேலை மூலம் பிரயாணம் இருக்கும்; சிலருக்கு வேலை மாற்றமும் இருக்கும். குருவின் 3இல் சஞ்சாரம் கூட பிரந்தோர்க்கு நல்லது செய்யும். வியாபாரத்தில் கடினமாக வேலை செய்தால், பான் மடங்கு லாபம், உயர்வு நிச்சயம். தாம்பத்திய உறவு சுமுகமாக இருக்கும். கேது 8இல் இருப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு உத்தமம். செய்யும் வேலையில் சன்மானம், மரியாதை நிச்சயம்.

தாய் சமான பெண்மணிகளிடம் அன்பாக இருங்கள்; வெள்ளி பொருள்கள் உபயோகியுங்கள். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு, என்ன மாதிரி பலன்கள் அமையும்?

சனி 5இல் குழந்தைகளுக்கு படிப்பிலோ, வேலையிலோ தொந்தரவு தரலாம். தாம்பத்திய வாழ்க்கை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் நல்ல நேரம். ராகு ஜென்மத்தில் இருப்பது மன சஞ்சலம் கொடுக்கும்; உடல் அசௌகர்யமும் வரலாம். கேதுவின் 7ஆம் வீட்டு கோச்சாரம் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் கிளப்பலாம்; அல்லது விரக்தி மனப்பான்மை ஏற்படுத்தலாம். குரு 2இல் இருப்பது குடும்பத்தில் அமைதி கொடுக்கும்; பண வருவாய் அதிகரித்தாலும் கூடவே செலவுகளும் இருக்கும். சூர்யன்-சுக்கிரன் 8இல் இருப்பது வேலையில் நிம்மதி குலைக்கும். புதன்-செவ்வாய் 9ஆம் வீட்டில் இருப்பது வீடு, மனை, வெளிநாட்டு பிரயாணம் போன்ற சுப யோகத்தை கொடுக்கும்.இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோகியத்தில் மிக அதிக கவனம் தேவை.

வீட்டின் கிழக்கு திசையில் சூர்யோதயம் முதல் சூர்யாஸ்தம் வரை ஜீரோ வாட் பல்ப் எரிய விட்டால் நன்மை உண்டாகும்.

கன்யா ராசிகர்களுக்கு என்ன நடக்குமென்று தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நான்கில் இருக்கும் சனி மனதின் அமைதி கெடுக்கும்; வீட்டில் பிரச்னைகள் அதிகரிக்கும்; குடும்ப நிம்மதி குலையும்; உடல் ஆரோக்கியம் கெடும். குருவின் ஜென்ம சஞ்சாரம் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். மனம் ஆன்மீகத்தில் லயித்து அமைதி காணலாம். குழந்தைகள் நன்றாக படித்து முன்னுக்கு வருவார்கள்; அவர்களுக்கு பிடித்த வேலையும் கிடைக்கும். ஆறில் உள்ள கேது எதிரிகளை அடக்கி வைத்தாலும், வேலையில் சக ஊழியர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருப்பது உங்களுக்கு தான் நல்லது. ஏழில் சூர்யன்-சுக்கிரன் காதலை ஊக்குவித்தாலும், தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல், பதற்றம் உண்டாக்கலாம். செவ்வாய்-புதன் 8இல் இருப்பது பல விதமான கஷ்டங்களை தரும் மற்றும் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களையோ செய்திகளையோ கொடுக்கும்.

துளசியை ஆராதனை செய்யுங்கள்; ப்ரஸாதமாய் உட்கொள்ளுங்கள்.

துலா ராசிக்காரர்களே, உங்கள் இந்த மாத பலன் என்ன சொல்கிறதென்று பார்ப்போமா?

இந்த மாத சனியின் 3ஆம் இட கோசாரம் உங்கள் சாகஸத்தை உயர்த்தும். நீங்கள் உங்கள் கார்ய-க்ஷேத்ரத்தில் கடினமாக உழைப்பீர்கள். ராகுவின் 11ஆம் இட சஞ்சாரம் பல விதங்களில் லாபத்தை தரும். ஷேர் பாஜார் மற்றும் லாட்டரியிலிருந்து தன லாபம் நிச்சயம். பெரிய சகோதரனின் உடல் ஆரோகியம் கெடலாம். குருவின் 12ஆம் வீட்டு கோச்சாரம் சுப விரயத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். வீட்டில் மங்களமான கார்யங்கள் நடக்கும். கேதுவின் 5ஆம் வீட்டு சஞ்சாரம் மந்த்ர சித்தி மற்றும் ஆன்மீகத்தில் ஊன்றி இருக்கிறவர்களுக்கு மிகவும் நல்லது செய்யும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறனை காமித்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். உங்கள் ஆற்றல், உற்சாகம் இந்த மாதம் உச்சத்தில்; உடல் ஆரோக்கியமாகவும், மனம் திடமாகவும் இருக்கும்.ஏழில் இருக்கும் செவ்வாய்-புதன் மூலம் வியாபாரத்தில் வளம் காணலாம். வாழ்க்கை துணைக்கு கோவம், ஆத்திரம் அதிகம் வரலாம். இதனால் தாம்பத்திய உறவில் அதிருப்தி நிலவும்.

கஷ்டப்படும் பெண்மணிகளுக்கு உதவி செய்யுங்கள்; உங்களுக்கு நல்லது.


விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு எப்படி என்று அறியலாமா?

இந்த மாதம் சனியின் சஞ்சாரம் 2ஆம் இடத்தில் நடக்கிறது. இதனால் இட மாற்றம் வரலாம். சிலருக்கு வீடு, மனை மூலம் லாபம் கிட்டும். குருவின் 11ஆம் வீட்டு சஞ்சாரம் பல வழிகளில் வருவாய் பெறுக உதவும். ஆர்ட்ஸ், மியூசிக், மெடிசின் போன்ற துறையில் இருக்கும் மாணவர்களுக்கு பிரகாசமான நேரம். ஆன்மீக விஷயங்களுக்கு இது நல்ல நேரம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ராகுவின் 10ஆம் இட சஞ்சாரம் செய்யும் வேலையில் பல மாற்றங்கள் கொண்டு வரலாம். சிலருக்கு வேலை மாற்றம் கூட இருக்கலாம். கேது 4இல் மன அமைதியை கலைக்கும். சிலர் வீடு-மனை விற்க நேரிடும். தாயின் ஆர்வம் ஆன்மீக, தார்மீக விஷயங்களில் அதிகரிக்கும். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும். புதன்-செவ்வாய் 6இல் விரோதிகளை அடக்கும்; உடல் வலிமையையும் கொடுக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன்-சூர்யன் சேர்க்கை வியாபாரத்தில் பிரமாதமான லாபத்தை தரும். தாம்பத்திய வாழ்க்கை உல்லாசமாக இருக்கும்.

தாமிரம் அல்லது ஸ்வர்ணத்தால் ஆன நாணயம் உங்களிடம் எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள்.

தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு எப்படி பட்ட பலன் இருக்கிறது என்று பார்ப்போமா?

ஜென்ம சனி கடும் உழைப்புக்கு பிறகு ஊதிய உயர்வு மற்றும் வேலையில் நல்ல திருப்பம் ஏற்படுத்தும். நண்பர்களுடைய மற்றும் கூட பிறந்தோரின் சஹயோகமும், அன்பும் உங்களுக்கு நிச்சயம். ராகுவின் 9ஆம் இட சஞ்சாரம் தந்தையின் சுகாதாரத்திற்கு கெடுதல் செய்யும். நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்ளலாம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோகியத்தில் கவனம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். கேதுவின் 3ஆம் இடத்தில் இருப்பது உங்களை தைர்யசாலியாக ஆக்கும். குருவின் 10ஆம் இடத்தில் இருப்பது வேலையில் ஒரு உச்ச நிலை வகிக்க உதவும். சுக்கிரன்-சூர்யன் 4இல் இடமாற்றம் கொடுக்கலாம். ஒரு பெரிய, அழகிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். செவ்வாய்-புதன் 5இல் சேர்க்கை குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கும். காதல் ஜோடிகளுக்கு நல்ல நேரம் தான் இருந்தாலும் சின்ன விஷயங்களில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மஞ்சள் நிற துணி / கைக்குட்டை உபயோகிக்கவும்; அதிர்ஷ்டமாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம் எந்த விதமான ப்ரபாவத்தை கொண்டு வரும்?

சனி 12இல் இருப்பது செலவை அதிகரிக்கும். கண், கால் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். குரு 9இல் உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்தை அதிகமாக்கும்; புனித பயணமும் உண்டாகலாம். குழந்தைகளின் விஷயத்தில் திடீரென பிரமாதமான விஷயங்கள் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பிறக்கவும் நல்ல நேரம். கேதுவின் 2ஆம் இட சஞ்சாரம் திடீர் தன லாபம் அல்லது பண இழப்பு கொடுக்கும். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். ராகுவின் 8ஆம் இட கோசாரம் குடும்பத்தில் சொத்து சம்பந்த தகராறு தரும். கீழே விழுதல், அடி படுதல், தூக்கம் இல்லாமை போன்ற பிரச்னைகள் இருக்கும். தாயுடன் கருத்து வேறுபாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சூர்யன்-சுக்கிரன் 3ஆம் இட சஞ்சாரம் மேல் அதிகாரிகளிடம் மோதல் ஏற்படுத்தலாம். செவ்வாய்-புதன் 4இல் இருப்பது வீடு வாங்கும் யோகம் காண்பிக்கிறது.

பக்ஷிகளுக்கு தான்யம் போடுங்கள். நல்லது நடக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன் கிடைக்கும்?

சனி 11இல் உள்ளார். பல விதத்தில் லாபத்தை உண்டு பண்ணுவார். உடல் திடமாக இருக்கும். பெரிய சகோதர உறவு மூலம் உதவி நிச்சயம் கிடைக்கும். கேது ஜென்மத்தில் உங்களுக்கு ஆன்மீக ஞானம் கொடுக்கும். எப்பவும் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. வீட்டில் உள்ள பெரியர்களிடமும் சிறியோர்களிடமும் அன்பாக இருங்கள். தாயின் சஹயோகம் பூரணமாக உங்களுக்கு தான். ராகு ஏழில் கணவன்-மனைவி உறவில் எதிர்பாராத பிரச்னைகள் கிளப்பி, போராட்டம் உண்டு பண்ணும். சூர்யன்-சுக்கிரன் 2இல் சேர்க்கை வருவாய் வேகமாக அதிகப்படுத்தும்; வியாபார வ்ருத்திக்கும் நல்லது. வெகுதூர பிரயாணத்தினால் நன்மை அடைவீர்கள். புதன்-செவ்வாய் சேர்க்கையில் 3இல் சகோதர சம்பந்தத்தில் விரிசல் காண்பிக்கிறது. டெக்னிகல் சம்பந்த படிப்பு தொடரும் மாணவர்கள் மிக வேகமாக முன்னேற்றம் காண்பார்கள்.


முறைப்படி தியானம் செய்தால் உங்களுக்கு ரொம்பவே நல்லது.


மீன ராசி நேயர்களே, வாருங்கள். உங்கள் இந்த மாத பலன் என்னவென்று பார்ப்போமா? 

இந்த மாதம் சனி 10இல் சஞ்சரிக்கிறார்; வேலையில் மாற்றம் இருக்கும்; வேலை மூலம் நீங்கள் விதேஷ பிரயாணம் செய்யலாம்; வீடு மாற்றமும் சாத்தியம். செய்யும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். தாம்பத்திய வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். ஆறில் இருக்கும் ராகு விரோதிகளை அறவோடு முடித்துவிடும். போட்டி, தேர்வு போன்ற விஷயங்களில் நீங்கள் உங்கள் திறனை நன்றாக காண்பிப்பீர்கள். குடும்பத்தில் டென்க்ஷன் நிலவும். குருவின் 7ஆம் வீட்டு கோச்சாரம் எல்லாவிதத்திலும் நன்மை செய்யும்; உடல் ஆரோக்கியம், மன திடம், தாம்பத்திய உறவில் நிம்மதி மற்றும் வாழ்க்கையில் உற்சாகம் போன்றவற்றிற்கு நல்லது. கூட பிறந்தோர், நண்பர்களுடன் சம்பந்தம் பிரமாதமாக இருக்கும். சூர்யன்-சுக்கிரன் ஜென்மத்தில் இருப்பது உடல் அசௌகரியம் கொடுக்கலாம். செவ்வாய்-புதன் 2ஆம் வீட்டு சேர்க்கை வியாபாரத்தில் லாபமும் தன விருத்தியும் கொடுக்கும். 


வயதானவர்களிடம் அன்புடனும் பணிவுடனும் இருங்கள். எல்லாம் சுபமாக இருக்கும்.
Read More »

பிப்ரவரி 2017 ராசி-பலன்



உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த பிப்ரவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்

மேஷம்


சனியின் ஒன்பதாவது வீட்டு கோச்சாரம் தகப்பனாரின் ஆரோகியத்தையும் சுகத்தையும் கெடுக்கும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். செய்யும் வேலையில் முன்னேற்றமும் லாபமும் கட்டாயம். உங்கள் பாக்கியம் பிரகாசமாக இருக்கும். உங்களுக்கு பாராட்டும், புகழும், பதவி உயர்வும் நிச்சயம். நீங்கள் கார்யம் சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். ராகுவின் 5ஆம் வீட்டு சஞ்சாரம் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் தகராறு கொடுக்கும். மேலும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வயறு சம்பந்த விஷயத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குருவின் 6ஆவது வீட்டு கோச்சாரம் உங்களை கடினமாக போராட வைக்கும். எதிரிகள் உங்களிடம் வால் ஆட்ட மாட்டார்கள். கேதுவின் 11 ஆவது வீட்டு சஞ்சாரம் உங்களுக்கு எல்லா விதத்திலும் லாபமாக இருக்கும். இது உங்களின் சாகஸத்தை விருத்தி செய்ய வல்லது. முன்பை விட நீங்கள் உடலில் சக்தியும் உள்ளத்தில் ஆற்றலும் அதிகம் உணர்வீர்கள். சுக்கிரன், செவ்வாய் 12ஆம் வீட்டு சஞ்சாரம் வெளிநாடு செல்லும் யோகம் கொடுக்கும்.

காலையில் எழுந்தவுடன் பூமியை வணங்கிவிட்டு மற்ற வேலை கவனிக்கவும்.

ரிஷபம்


இந்த மாதம் அஷ்டம சனியின் ப்ரபாவத்தினால் உங்கள் ஆர்வம் ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் செல்லும். செய்யும் வேலையில் மாற்றம் இருக்கும் மற்றும் சில தொந்தரவுகளும் கூடவே இருக்கும். சிலருக்கு பணியில் லாபமும் கிட்டும். ராகுவின் 4ஆம் வீட்டு கோச்சாரம் மனதளவில் அதிருப்தியும் அழுத்தமும் கொடுக்கும். உங்கள் தாய்க்கு ஆரோக்கியம் சம்பந்தமாக சில பிரச்னைகள் வரலாம். பரிவாரகத்தில் சண்டை-சச்சரவு போன்ற விவகாரங்கள் வரலாம். ஜாகிரதையாக கையாளுங்கள். சிலருக்கு கார்ய சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். வேலை விஷயத்தில் பார்த்து நடந்து கொள்ளுங்கள். கேதுவின் 10ஆம் வீட்டு கோச்சாரம் பணியில் சில திடீர் திருப்பங்கள் கொடுக்கலாம். குடும்பத்தை விட்டு வெகுதூரம் செய்ய நேரிடலாம். ஆன்மீக பிரயாணம் மற்றும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் ஈடுபாடு உண்டாகும். சூரியனின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் மேல் அதிகாரிகளிடமிருந்து அன்பும் ஆதரவும் கொடுக்க வல்லது. சுக்கிரன்-செவ்வாய் 11ஆம் வீட்டு சஞ்சாரம் லாபம் மற்றும் திட ஆரோக்கியம் கொடுக்கும். உங்கள் வியாபாரம் விருத்தி அடையும் மற்றும் வாழ்க்கை துணையின் மூலம் நல்ல சமாச்சாரம் கிட்டும். குருவின் 5ஆம் வீடு கோச்சாரம் உங்களுக்கு மன நிம்மதியும், சமய ஈடுபாடும், குழந்தைகள் விஷயத்தில் நிறைவும் கொடுக்கும்.

வெள்ளியினால் ஆன அணிகலன்கள் மற்றும் பொருள்கள் உபயோகியுங்கள்.நன்மை தரும்.

மிதுனம்


சனியின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் வெகுதூர பயணமோ வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிரயாணமோ கொடுக்கலாம். சிலருக்கு பரம்பரை சொத்து வர வாய்ப்பு இருக்கிறது மற்றும் தந்தை வழியிலிருந்து ஆதரவு கிட்டும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. ராகுவின் மூன்றாம் வீட்டு கோச்சாரம் காரணமாக உங்கள் ஆற்றலிலும் பராக்ரமத்திலும் பன் மடங்கு உயர்வு நீங்கள் காணலாம். செய்யும் காரியத்தில் உங்கள் திறன் பளிச்சிடும். கேதுவின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் உங்கள் தந்தையின் ஆன்மீக வளர்ச்சியில் உதவி செய்யும். சிலர் புனித பிரயாணம் மேற்கொள்ளலாம். குரு 4ஆம் வீட்டில் இருப்பது உங்கள் மன நிம்மதியை அதிகரித்து உங்கள் தியானத்தை நல்ல சமாச்சாரங்களில் திருப்பும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருக்கும். தாயின் உடல் ஆரோகியமும் மன நிறைவும் ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரி க்கலாம். செய்யும் வேலையில் பதவி உயர்வும் விருத்தியும் அடைய நல்ல வாய்ப்பு கிட்டும். ராசி நாதன் புதனின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் நல்ல திருப்பங்களையும் பண விஷயத்தில் திருப்தியும் கொடுக்கும். செவ்வாய்-சுக்கிரன் 10ஆம் வீட்டு சஞ்சாரம் பதவியில் நல்ல மதிப்பு கொடுக்கும் மற்றும் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க வழி வகுக்கும். 

பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் ஜலம் நிரப்பி வெய்யிலில் வைத்து அதை உட்கொள்ளுங்கள்.

கடகம்


இந்த மாதம் சனியின் 6ஆம் வீட்டு சஞ்சாரம் உங்களின் விரோதிகளை அடக்க வல்லது. எவரும் உங்களுக்கு கெடுதல் செய்ய முடியாது. வேலை செய்யும் திறன் பன் மடங்கு ஓங்கும் மற்றும் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். ராகுவின் 2ஆம் வீட்டு சஞ்சாரம் பண விவகாரத்தில் பிரச்னைகளை உண்டு பண்ணி தன நாசம் பண்ணும். கவனம் தேவை. இந்த சமயத்தில் குடும்பத்தில் வீண் வம்புகள் மற்றும் கலகங்கள் வளர மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. பணியில் சக ஊழியர்களிடம் மேல் அதிகாரிகளிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது நல்லது. குருவின் 3ஆம் வீட்டு சஞ்சாரம் பாகியத்தை பிரகாசிக்கும், மேலும் 7ஆம் வீட்டில் படும் பார்வை வியாபாரம் மற்றும் தாம்பத்திய சம்பந்தங்களுக்கு நல்லது. கேதுவின் 8ஆம் வீட்டு சஞ்சாரம் உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் கொடு வர வல்லது. சூரியனின் 7ஆம் இடத்தில் இருப்பது உங்கள் வாழ்க்கை துணையுடன் சில தகராறுகள் உண்டு பண்ணலாம்; வியாபாரத்திலும் பண பிரச்னைகள் கிளப்பலாம். சுக்கிரன்-செவ்வாயின் 9ஆம் வீட்டு கோச்சாரம் பாகியத்தை பிரகாசித்து, செய்யும் வேலையில் வளர்ச்சி கொடுத்து, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கட்டாயம் கொடுக்கும்.

பக்ஷிகளுக்கு தானியமும் ஜலமும் கொடுங்கள்; நல்லது நடக்கும்.

சிம்மம்


இந்த மாதம் ராகு உங்கள் ஜென்மத்தில் இருப்பதால், உடல் ஆரோகியதில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் ஜாகிரதையாக இருக்கவும். வயறு சம்பந்த தொந்தரவுகள் வரும் போகும். குருவின் 2ஆம் இட சஞ்சாரம் குடும்ப சம்பந்தங்களுக்கு நல்லது செய்யும். தேவையான ஆடம்பர சாமான்களும் சுகத்திற்கு உதவும் பொருட்களும் தானாகவே வந்து குவியும். செய்யும் பணியில் மேல் அதிகாரிகளின் பாராட்டு, மற்றவர்களின் ஆதரவும் நன்கு கிட்டும். இந்த சமயம் உங்களுக்கு வலை மூலம் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. சனியின் பிரபாவம் மூலம் வாழ்க்கை துணையின் ஆதரவும் செய்யும் வேலையில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் கார்ய க்ஷேத்திரத்தில் நல்ல திருப்புமுனை இருக்கிறது. கேதுவின் 7ஆம் இடத்தில் இருப்பது வியாபாரத்தில் புதிய மற்றும் நூதன மாற்றங்களை குறிக்கிறது. மேலும் இதனால் வாழ்க்கை துணையின் சுகாதாரம் கெடும். செவ்வாய்-சுக்கிரன் 8ஆம் இட அமைப்பு வாழ்க்கையில் முக்கியமாக தொழிலில் நிறைய மாற்றம் கொண்டு வரும். கவனமாக ஏற்றுக்கொள்ளவும். ராசி நாதன் சூரியனின் 6ஆம் இட நிலை நல்லது இல்லை என்றாலும், உங்கள் பராக்ரமும் சாகசமும் பெருகும்.

சூர்யோத யோக-அப்யாசம் மற்றும் பிராணாயாம் செய்வது நல்லது.

கன்யா


தேவகுரு ப்ருஹஸ்பதியின் ஜென்மத்தில் இருப்பது உங்களின் சாத்வீக மற்றும் ஆன்மீக குணங்களில் விருத்தி செய்யும். குழந்தைகளின் வாழ்க்கை மேலுக்கு மேல் உயரும். தந்தையின் சன்மானமும் அந்தஸ்தும் உயர்வு காணும். ராகுவின் 12ஆம் இட அமைப்பு பண விரையம் கொடுக்கும். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும். செய்யும் வேலையில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் செய்யும் முன் கொஞ்சம் நிதானமாக இருக்கவும். கேதுவின் 6ஆம் வீட்டு கோசாரம் உங்கள் விரோதிகளை அடக்கி வைக்கும். காம்பெடிட்டிவ் எக்ஸாம்ஸ் போன்ற விஷயத்தில் நீங்கள் பிரமாதமாக செய்து முடிப்பீர்கள்.

வெண்கலம் வலது கையில் அணிந்து நன்மை பெறவும்.

துலாம்


சனியின் மூன்றாம் இட கோச்சாரம் ஏழரை நாட்டு சனிக்கு முற்று புள்ளி வைக்கிறது. உங்கள் சாகசம், பராக்ரமம், ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனம் பளிச்சிடும். கூட பிறந்தோரிடம் நல்ல சம்பந்தம் வைத்துக்கொள்ளுங்கள்.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். புதனின் மூன்றாம் இட சஞ்சாரம் பாக்கியத்தை பிரகாசிக்கும். ராகுவின் 11ஆம் வீட்டு சஞ்சாரம் பல விதத்தில் நன்மை செய்யும். கேதுவின் 5ஆம் இட அமைப்பு உங்களுக்கு ஆன்மீகத்திலும் தத்துவ ஞானத்திலும் ஆர்வம் உண்டாக்கி ஆத்ம விகாசத்திற்கு சஹாயோகம் செய்யும். கொஞ்சம் உடல் ஆரோகியதில் கவனம் செலுத்தினால் உங்களுக்கு ரொம்ப நல்லது.தாய் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, மனை வாங்குவதற்கு இது நல்ல நேரம்.

பால் பண்டங்களை உட்கொள்ளுங்கள்; மற்றவர்களுக்கும் கொடுங்கள்.

வ்ருச்சிகம்


சனியின் இரண்டாம் கோச்சாரம் பண விஷயத்தில் தகராறு செய்யும்; பண தட்டுப்பாடு நீடிக்கும். தாயின் ஸ்வபாவத்தில் விரக்தி காண்பீர்கள்; அவர்கள் ஆரோகியத்திற்கும் பங்கம் வரும். வீடு,மனை மூலம் லாபம் கட்டாயம். வீடு வாங்குவதற்கும் இது ஒரு பிரமாதமான நேரம். குருவின் 11ஆம் வீட்டு கோச்சாரம் எல்லா வித நன்மை கொடுக்கும். மனதை திருப்தியாகவும் நிம்மதியாகவும் வைப்பதற்கு நீங்கள் படாத பாடு படுவீர்கள். சிலர் இடமாற்றம் காணலாம்; வேறு பலர் செய்யும் காரியத்தில் நிறைய மாற்றங்கள் காண்பார்கள். வேலை மாற்றம் ஆனாலும் ஆகலாம். நீங்கள் வேலை சம்பந்தமாக வெகுதூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். பரிவாரகத்தில் சந்தோஷமின்மை ஓங்கும்.

பரிசுத்தமான தேன் உட்கொண்டால் ஆரோகியத்திற்கு நல்லது. சனி ப்ரீத்தி செய்யவும்.

தனுசு


சனியின் ஜென்ம கோச்சாரம் மனதில் அழுத்தம் கொடுத்தாலும், சகோதர வழியில் நல்ல பலனை தர வல்லது. வியாபாரத்தில் வளம் காண்பீர்கள்; செய்யும் வேலையை நன்றாகவும் கடினமாக உழைத்தும் செய்வீர்கள். ராசி நாதன் குருவின் 10ஆம் வீட்டு சஞ்சாரம் பதவி உயர்வு, பண உயர்வு, சன்மானம், நல்ல பெயர், மதிப்பு மற்றும் செய்யும் வேலையில் ஒரு மன நிறைவும் திருப்தியும் கட்டாயம் தரும். உங்கள் உடல் வலிமை, புத்தி கூர்மை, வாக்கு சாதுர்யம் போன்றவை வளம் காணும். குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ராகுவின் 9ஆம் வீட்டு சஞ்சாரம் தந்தையின் உடல் நிலையை பாதிக்கலாம். ஆன்மீக சம்பந்தமான பிரயாணம் மேற்கொள்வீர்கள். எல்லா விஷயத்திலும் தைர்யமாக செயல் படுவீர்கள். வாழ்க்கைத்துணை ஆரோக்கியத்தில் கவனக்குறைவு கூடாது. சிலர் வீட்டில் அமைதியின்மை காண்பார்கள். சொத்து விவகாரத்தில் பிரச்சனைகள் வந்தால் பார்த்து சமாளியுங்கள். 

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ திலகம் இட்டு கொள்ளுங்கள்; நல்ல பலன்கள் அதிகரிக்கும். 

மகரம்


சனியின் 12ஆம் இட கோச்சாரம் வெளிநாட்டில் இருந்து நல்ல சமாசாரங்கள் மற்றும் லாபங்கள் கொண்டு வர வல்லது. தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீங்கள் வெகுதூர வெளிநாட்டு பிரயாணம் செய்யலாம். பணம் அதிகமாக செலவு ஆகும்; ஜாக்கிரதையாக நிலைமையை சமாளியுங்கள். ஆன்மீக விவகாரத்திலும், பூஜை புனஸ்காரத்திலும், தேவ ஆலய தரிசனத்திலும் படு வேகமாகமாக இறங்குவீர்கள். ராகுவின் 8ஆம் வீட்டு கோச்சாரம் தாயின் சுகத்திற்கு கெடுதல் செய்யும். வாஹனம் ஓட்டுவதில் கவனம் தேவை; வேண்டாத பிரச்னைகளை தவிர்க்கும். தாம்பத்திய உறவில் நிதானமாக செயல் பாடவும்; விவாதம், வேறு பாடு விஷயங்களை தவிர்ப்பது நல்லது.செய்யும் வேளையில் மாற்றம் இருக்கும்; சிலர் கார்ய-சம்பந்த பிரயாணமும் செய்வார்க கேது 2இல் இருந்து செலவை அதிகரிப்பார். சிலர் வேலையில் நல்ல வளம் காணலாம்.

ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்யுங்கள்; வாழ்க்கையில் சுபம், மங்களம் உண்டாகும்.

கும்பம்


ராசி நாதன் சனியின் 11ஆம் இட கோச்சாரம் எல்லா விதத்திலும் லாபமும் நன்மையும் செய்யும். கடினமாகவும் சந்தோஷமாகவும் உழைப்பீர்கள். உங்கள் குழந்தவர்கள் தங்கள் படிப்பில், வேலையில் முன்னேறுவார்கள். சிலர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். குருவின் 8ஆம் இட சஞ்சாரம் உங்கள் தாய் தந்தையின் ஆன்மீக வளர்ச்சிக்கு மகத்துவம் கொடுக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உள்ளது. ராகுவின் 7ஆம் இட சஞ்சாரம் தாம்பத்திய உறவிற்கு பிரச்னை தரும். சிலர் வியாபாரத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் எதிர் பார்க்கலாம். கேதுவின் ஜென்ம சஞ்சாரம் ஆன்மீகத்தில் ஆர்வமும், சாமான்ய வாழ்க்கையில் பற்றிமையும் கொடுக்கலாம். உடல் ஆரோகியதில் கவனம் வேண்டும். சிலர் வீடு மற்றும் வாகன பிராப்தி செய்வார்கள்.

ஏழை எளியோர்களுக்கு நல்லது செய்து உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களுக்கு அடிகோல் போடுங்கள்.

மீனம்


சனியின் 10ஆம் இட சஞ்சாரம் காரியத்தில் கடினமாக உழைக்க ஊக்குவிக்கும்.நன்றாகவும் வேலை செய்து எல்லோர் பாராட்டும் பெறுவீர்கள். தாயின் உடன் நிலையில் கவனம் தேவை. மனதி அழுத்தம் இருக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். உடல் வலிமையுடன் இருக்கும்; எந்த ஒரு காரியத்தை எடுத்து முடிக்கிற சக்தியும் தரும். ராசிநாதனின் ஏழாவது இட கோச்சாரம் எல்லா விதத்திலும் நல்லது செய்யும். தார்மிக, ஆன்மீக விஷத்தில் ஆர்வம் பொங்கும். சிலர் ஆன்மீக சங்கத்துடன் சம்பந்தம் கொள்வார்கள். குழந்தைகள் விஷயத்தில் சிறு கவனம் பெரிய பிரச்னையை தவிர்க்கும். புதனின் 10ஆம் இட கோச்சாரம் வியாபாரத்தில் விருத்தி கொடுத்து கிக லாபம் சம்பாதிக்க வழி வகுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

ஸ்நானம் செய்யும் ஜலத்தில் மஞ்சள் தூவி உபயோகியுங்கள்; சுபமாக இருக்கும்.
Read More »

ஜனவரி 2017 ராசி பலன்


உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஜனவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்

மேஷம்


ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்வதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் காரியத்தில் இறங்குவீர்கள். எதிர்பாராதவிதமாக லாபம் காண்பீர்கள். செய்யும் வேலையில் உயர்வு கட்டாயம். சக ஊழியர்களிடம் மற்றும் உச்ச அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது நல்லது. வேலை மாற்றம் எதிர்பார்த்து கொண்டிருப்போர்களுக்கு இது நல்ல சமயம், கட்டாயம் பிரமாதமான வாய்ப்பு கிடைக்கும். அஷ்டம சனி காரணமாக குடும்பத்திலோ அல்லது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படலாம். இது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும். ராகுவின் ஐந்தாம் இட கோச்சாரம் பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விஷயங்களில் தொந்தரவு கொடுக்கும். இந்த சமயம் கார்யம் சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். வ்யாபாரத்திலிருப்போர் நிதானமாக செயல் பட வேண்டிய நேரம். ஜாஸ்தி முதலீடு போடாமல் இருப்பது நன்மை தரும். கலைகள், இயந்திரங்கள், அழகு சம்பந்தமான விஷயங்களில் வேலை பார்ப்போர் லாபம் எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து போங்கள். நிம்மதியும் குதூகலமும் காண்பீர்கள். உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. 

தாம்பரத்தில் அல்லது தங்கத்தில் ஆன வளையல் உபயோகித்தால் நன்மை தரும். 

ரிஷபம்


ராசிநாதன் சுக்கிரனின் பத்தாம் இட கோச்சாரம் காரணமாக நீங்கள் மிகவும் உல்லாசமும் உத்வேகமும் காண்பீர்கள். பணியில் உள்ளோர் மேல் அதிகாரிகளிடம் இருந்து புகழ் பெறுவார்கள். மாத கடைசியில் சனி எட்டாம் இடமான தனுசு ராசியில் பெயர்ச்சி செய்கிறார். கார்ய க்ஷேத்திரத்தில் மாற்றம் அல்லது வேலை சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். குருவின் ஐந்தாம் சஞ்சாரம் எல்லா விதத்திலும் நன்மை தரும். செய்யும் வேலையை புத்துணர்வுடன் கவனமாக செய்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். இரும்பு, ஆட்டோமொபைல், ஆடம்பரமான சாமான்கள், நூதன பொருட்கள் சம்பந்தமான வியாபாரிகள் பெருமளவில் வளர்ச்சி காண்பார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பில் வேகமாக முன்னேறுவார்கள்; புத்தி சாதுர்யத்தினால் பாராட்டும் பெறுவார்கள். ராகுவின் நான்காம் வீட்டு சஞ்சாரம் தாயின் உடல் ஆரோகியத்தை பாதிக்கலாம். ஏதாவது தீர்த்த யாத்திரை மேற்க்கொள்வீர்கள். சகோதரர்களும் மித்திரர்களும் பூரண ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும், ஆனால் பண விஷயத்தில், கொடுக்கல் வாங்கல் மற்றும் முதலீட்டில் கவனக்குறைவு பிரச்சினைகளை கிளப்பும். இந்த மாதம் உடல் நலமும், மன நிம்மதியும் தரும்.

கன்யா குழந்தைகளுக்கு தித்திப்பு வாங்கி கொடுங்கள். பெண்களிடம் அன்பாக இருங்கள். நலன் பெறுவீர்கள். 

மிதுனம்


இந்த மாதம் உங்கள் ராசிநாதன் புதன் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்கள் உடலில் திடமும் உள்ளத்தில் நிம்மதியும் இருக்கும். வேலையிலும் மனதை ஒருமுகப்படுத்தி செயல் படுவீர்கள். மூன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் நிறைய தைர்யமும், வேலையில் கடினமாக உழைக்கும் திறனும் கிடைக்கும். குருவின் கோச்சாரம், செய்யும் பணியில் ஒரு நல்ல திருப்பத்தை தரும். சனியின் ஆறாம் வீட்டு சஞ்சாரம் எதிரிகளையும் விரோதிகளையம் அடங்க வைக்கும். மாணவர்கள் எந்த விதமான போட்டியிலும் வெற்றி காண்பார்கள். சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து 11ஆம் வீட்டில் கோச்சாரம் செய்வது குழந்தைகளுக்கு நல்லது செய்யும். நீங்களும் மனா நிறைவும் பண நிறைவும் பெறுவீர்கள். மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டு. செவ்வாய் ஒன்பதில் இருப்பது தந்தையின் உடல் நலனுக்கு சற்று கெடுதல் செய்யலாம். ஜாக்கிரதையாக இருக்கவும். 

பச்சை நிற ஆடை அணியவும்; வெண்கல வளையல் மற்றும் பாத்திரம் உபயோகிக்கவும்.

கடகம்


ராகுவின் இரண்டாம் வீட்டு கோச்சாரம் பண தட்டுப்பாடும், பண விவகாரத்தில் பிரச்னைகளையும் உண்டு பண்ணும். சிலர் குடும்பத்தை விட்டு தூர செல்வார்கள். மூன்றாம் வீட்டில் உள்ள குருவினால் நினைக்க முடியாத கார்யங்கள் முடிக்க வாய்ப்பு உள்ளது. கூட பிறந்தோர் உடல் நிலை கவலை தரும். ஐந்தில் இருக்கும் சனி குழந்தைகலின் படிப்பில் தடங்கல் செய்யலாம். உங்கள் மன நிம்மதியையும் பாதிக்கும். வாழ்க்கை துணையுடன் ஒத்து போனால் ரொம்பவே நல்லது. வயறு சம்பந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. தந்தையின் ஆரோக்கியம் சந்தோஷம் தரும். தாயின்உடல் நலம் சீராக இருக்காது. மாணவர்கள் மிகவும் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டி வரும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் செவ்வாயும் செய்யும் தொழிலில் பிரச்னைகள் உண்டு பண்ணுவார்கள்; ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். மேல் அதிகாரிகளிடம் மற்றும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகவும். வரம்பு மீறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது.

வீட்டில் அக்வேரியம் வைத்து மீன்களுக்கு தீனி போடுங்கள். வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.

சிம்மம்


குருவின் இரண்டாவது இட சஞ்சாரம் குடும்பத்தில் சந்தோஷம் தரும். உற்றார் உறவினர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை மலரும். இனிமையான வாக்கின் மூலம் எல்லோர் மனதையும் கவருவீர்கள். உங்கள் கௌரவம், மதிப்பு நாளுக்கு நாள் ஓங்கும். ஜென்மத்தில் ராகு இருப்பதினால், ஆரோகியத்தில் கவனக்குறைவு பிரச்னைகள் கொண்டு வரும். சனியின் நான்காவது வீடு சஞ்சாரம் மன நிறைவை குறைக்கும் மற்றும் தாய் உடல் ஆரோகியத்தை கெடுக்கும். சூர்யன், புதன் சேர்க்கை புத்தி சாதூர்யத்தை வளர்க்க உதவும். ஐந்தாம் வீட்டில் இந்த புத-ஆதித்ய யோகம் தன்த்ரம், மன்த்ரம் மற்றும் கல்விக்கு மிகவும் உகந்தது. ஏழாவது வீட்டில் செவ்வாய், சுக்கிரன் கோச்சாரம் உத்யோகத்தில் நல்ல பலன் தரும். வியாபாரத்திலும், செய்யும் தொழிலிலும் கடுமையான உழைப்பினால் வேகமாக முன்னேறுவீர்கள். வேலை சம்பந்தமாக வெகு தூர பிரயாணம் செய்ய நேரிடும். ஏழாவதில் இருக்கும் கேது வாழ்க்கை துணையின் உடல் நிலையை பாதிக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது.

சூர்ய நமஸ்காரம் செய்யவும்; சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிற கைக்குட்டை நல்ல பலன் தரும். 

கன்யா


ஜென்மத்தில் இருக்கும் குருவினால் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மனம் ஸ்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏதோ மனது பாரம் குறைந்தது போன்று இருக்கும். பன்னிரண்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் வெளிநாட்டிலிருந்து லாபம் வர வாய்ப்பு இருக்கிறது. கூடவே தூக்கமின்மையும் கால் சம்பந்த பட்ட பிரச்னையும் சிலருக்கு வரலாம். மூன்றில் இருக்கும் சனியினால் பராக்கிரமமும் தைர்யமும் அதிகரிக்கும். நீங்கள் முன்பை விட அதிகம் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் காட்சி அளிப்பீர்கள். ஒரே சமயத்தில் பல கார்யங்கள் செய்து முடிக்கும் திறன் வைப்பீர்கள். உங்கள் தகப்பனாரின் ஆரோக்கிய சம்பந்தமான எந்த விஷயத்திலும் ஆஜாக்கிரதை ஆபத்தில் கொண்டு விடும். நாலில் இருக்கும் புத-சூர்யனின் சேர்க்கையினால் மனதில் அமைதியின்மை உணர்வீர்கள். வாழ்க்கை துணையின் அன்பும் உதவியும் மனப்பூர்வமாக கிடைக்கும். ஆறில் இருக்கும் செவ்வாய் கேது சேர்க்கை உங்களை பல மடங்கு உழைக்கவும் எடுத்த காரியத்தை முடிக்கும் தைர்யம் கொடுக்கும். எதிரிகள் தொந்தரவு கிடையாது. மாணவர்கள் எந்தவிதமான போட்டி தேர்விலும் கடினத்துடன் உற்சாகத்துடன் உழைத்து வெற்றி காண்பார்கள். 

ஏழை மாணவர்களுக்கு படிப்பு சம்பமான உதவி பண்ணுங்கள். சுப பலன் கிடைக்கும்.

துலாம்


கோச்சார சனி இரண்டாம் இடத்தில் இருந்து திடீர் பண வரவை குறிக்கிறார். பன்னிரண்டில் உள்ள குரு சஞ்சாரம் பாரிவாரக சந்தோஷத்தை மேம்படுத்தும். மாணவர்கள் படிப்பில் நல்ல பெயர் வாங்குவார்கள். ராகுவின் 11 ஆம் வீட்டு சஞ்சாரம் எல்லா விதத்திலும் லாபம் அளிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குமியும். சூர்யன்-புதன் 3 ஆம் இட கோச்சாரம் உங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும். எடுத்த காரியத்தை குறைவில்லாமல் முடித்து கொடுப்பீர்கள். கூடப்பிறந்தோர் உதவியினால் உங்களுக்கு தனலாபம் கட்டாயம். உங்கள் வாழ்க்கைத்துணையின் மூலம் ஏதேனும் லாபமோ, நல்ல செய்தியோ கிடைக்கும். குழந்தைகளிடம் அன்பாக ஆனால் கண்டிப்பாகவும் இருந்தால் நல்லது. எல்லோருடனும் சம்பந்தங்கள் நன்றாக இருந்தாலும், இந்த சமயம் உங்கள் வாழ்க்கை துணைக்கு அசௌகரியம் ஏற்பலாம். உடனே கவனிக்கவும்.

பெண்மணிகளுக்கு பட்டு ஆடை, தாம்பூலம், பூ, பழம் மற்றும் மஞ்சள்-குங்குமம் கொடுத்து உபசரியுங்கள்.

வ்ருச்சிகம்


இந்த மாதம் ஜென்மத்தில் சனியின் சஞ்சாரம் நடக்கிறது. உடல் மற்றும் மன ஆரோகியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். குருவின் 11ஆம் வீட்டு கோச்சாரம், சகோதரர்களுக்கு நன்மை செய்யும். அவர்களது அன்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்கள் புத்தி சாதூர்யத்தினால் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள்; மனதில் சந்தோஷம் நிலவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். சிலரின் பிள்ளைகள் சாதனை படைப்பார்கள். விவாக சம்பந்தத்தில் நிம்மதி நிலவும்; பரிவாரகத்தில் குதூகலம் காண்பீர்கள். வாழ்க்கை துணைக்கு சமூகத்தில் நல்ல பெயர், பாராட்டு கிடைக்கும். ராகுவின் 10 ஆம் வீட்டு சஞ்சாரம் செய்யும் பணியில் மாற்றம் மற்றும் எதிர்பாரா திருப்பம் கொண்டு வரும். கேதுவின் நான்காம் இட கோச்சாரம் இல்லறத்தில் மாற்றம் கொண்டு வரும். வேலை விஷயமாக வெளிநாட்டு பிரயாணம் கூடல் சிலர் செய்யலாம். தாயில் உடல் நலம் கவலை தரலாம். வீட்டிற்கு அழகு சாமான் வாங்கி அலங்காரம் செய்வீர்கள்.

மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டாம்; தொந்தரவு கொடுக்க வேண்டாம். கெட்ட பழக்கங்களை அறவோடு நிறுத்தவும். சுகமாக இருப்பீர்கள்.

தனுசு


இந்த மாதம், ஜென்மத்தில் சூர்யன்-புதன் சேர்க்கை உங்களை வாழ்க்கையின் உச்சிக்கு கொண்டு போகும். செய்யும் வேலையில் புகழும் பாராட்டும் குமியும். மேல் அதிகாரிகள் உங்கள் வேலை செய்யும் திறனை பார்த்து பிரமித்து போவார்கள். உன்னதமான நிலை, ப்ரமோஷன், பண உயர்வு மற்றும் வேலையில் திருப்தி போன்ற நல்ல சமாச்சாரங்கள் நடக்கும். ஒன்பதில் இருக்கும் ராகு சஞ்சாரத்தினால் வெளியூர் பிரயாணம் செய்யலாம். இந்த சமயம் ஏதாவது தீர்த்த யாத்திரை அல்லது ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்ட பிரயாணம் கூட நீங்கள் மேற்கொள்ளலாம். தந்தையின் உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. ராசிநாதன் குருவின் பத்தாம் வீடு கோச்சாரம் உங்களுக்கு வேலையில் அபாரமான வெற்றியும், உயர்வும் கிடைக்க உதவும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். உடல் நிலைக்கு நல்ல கவனம் கொடுத்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். சனியின் 12 ஆம் வீட்டு சஞ்சாரம் கவலை தன்தாலும், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியோ அல்லது லாபமோ கிட்ட வழி வகுக்கும். மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய்-கேது கோச்சாரம் சகோதர சம்பந்தங்களுக்கு பிரச்சனைகள் கொடுக்கலாம்.

சோம்பலை அறவோடு மறந்து வேலையில் இறங்குங்கள்; ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்


ராசிநாதன் சனியின் 11ஆம் வீட்டு கோச்சாரம் உங்களுக்கு நல்லது செய்யும். நீங்கள் ரொம்பவும் எனெர்ஜிடிக் மற்றும் பாஸிட்டிவ் ஆக உணர்வீர்கள். ஆரோகியத்திலும் சௌகர்யத்திலும் நிறைவு இருக்கும். இருந்தாலும் ராகுவின் 8ஆம் ஐடா சஞ்சாரம் எல்லா விதத்திலும் கவனமாக இருக்கும் படி வலியுறுத்துகிறது. வெகுதூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும்; உடனே கவனியுங்கள். குருவின் 9ஆம் வீட்டு கோச்சாரம் உங்களின் பாக்கியத்தை பிரகாசிக்க வைக்கும். நீங்கள் சாகசமாக வேலையில் இறங்குவீர்கள். கூட பிறந்தோர்களுக்கும் இந்த வேளை நல்ல வாய்ப்புகள் கொண்டு வரும். நீங்கள் ஏதாவது தார்மீக அல்லது ஆன்மீக சங்கத்துடன் சேர்ந்து நல்ல பயனுள்ள கார்யம் செய்வீர்கள். சூர்யன்-புதன் சேர்க்கை 12இல் வேலை சம்பந்த வெகு தூர பிரயாணம் கொடுக்கும். இது உங்களுக்கு நன்மை தர வல்லது. கேது, செவ்வாய், சுக்ரனின் 2ஆம் இட சஞ்சாரம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் பிரச்னைகள் கொண்டு வரலாம். 

சைவ உணவு உட்கொள்ளுங்கள். போதை தரும் பதார்த்தங்களிடம் இருந்து தூர இருங்கள்.

கும்பம்


ராசிநாதன் சனி 10ஆம் இடத்தில் இருக்கிறார்; கடினமாக உழைக்க வேண்டி வரும். ரொம்பவும் பாடு பட்டு எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். ஜென்மத்தில் கேது சுக்கிரன் சஞ்சாரம் தாய் அல்லது தந்தை ஆரோக்கியதை பாதிக்கும். உங்கள் உடல் நலன் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களின் பூர்ண சஹயோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆழமாக இயங்குவீர்கள். தார்மீக யாத்திரையும் பண்ணுவீர்கள். குருவின் 8ஆம் இட கோச்சாரம் ஆழ்ந்த மற்றும் மர்மமான ஆன்மீக விஷயத்தில் ஆய்வும். ஆர்வமும் மேம்படுத்தும். இந்த தருணத்தில் எதிர்பாராவிதமாக தன லாபம் பெறுவீர்கள். பாரிவாரகத்தில் திருப்தி, சந்தோசம் நிலவுவதற்கு நீங்கள் நன்றாக பிரயத்தனம் செய்வீர்கள். புதன்-சூர்யன் 11ஆம் இட சஞ்சாரம் ஷேர் மார்க்கெட்டில் மற்றும் ஸ்பெகுலேஷனில் திடீர் லாபத்தை கொடுக்கும். வியாபாரத்திலும் வளர்ச்சி காண்பீர்கள். ஆனால் பெரிய முதலீடு செய்யும் முன் நிதானமாக செயல் படவும். ராகுவின் 7ஆம் இட சஞ்சாரம் காரணமாக கவனக்குறைவிற்கு இடம் இல்லை.

மற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக்காதீர்கள். அன்பாகவும், நியாயமாகவும் செயல் படுங்கள். ஏழை எளியோர்களுக்கு தான தர்மம் செய்யுங்கள்.

மீனம்


ராசிநாதன் குருவின் கோச்சாரம் 7ஆம் பாவத்திலும், சனியின் சஞ்சாரம் 9ஆம் வீட்டிலும் இருப்பதனால், செய்யும் வேலையில் குறைந்த உழைப்புடன் நிறைய பாராட்டுகிட்டும். ஸ்நேகிதர்களிடமும் சகோதரர்களிடமிருந்தும் நிறைய ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் மேல் உங்கள் கை ஓங்கும், அதனால் அவர்கள் பணிந்து போவார்கள். சனியின் கோச்சாரம் தகப்பனாரின் ஆரோகியத்தை பாதிக்கலாம். ராகுவின் 6ஆம் இட சஞ்சாரத்தினால் போட்டி தேர்வுக்காக தயார் செய்யும் மாணவர்கள் பெரிய அளவில் சாதனை செய்து வெற்றி பெறுவார்கள். தைர்யமாகவும் சாகசமாகவும் வாழ்க்கையை சந்திப்பீர்கள். குருவின் பார்வை ஜென்மத்தில் இருப்பதால், உங்கள் புலனும், அறிவும், திறமையும் பளிச்சிடும். வாழ்க்கைத்துணையுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துவீர்கள். வேலை சம்பந்தமாக சிலர் தூர பயணம் மேற்கொள்வார்கள். சூர்யன்-புதன் 10ஆம் இடத்தில் கோச்சாரம் செய்வதால், வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர், பாராட்டு, புகழ், மதிப்பு எல்லாம் கிடைக்கும். தாயில் உடல் நலத்தில் அக்கறை தேவை. கேது-செவ்வாய்-சுக்கிரன் 12இல் இருப்பதனால், நித்திரையின்மையினால் பாதிக்கப்படலாம்.

உங்களால் முடிந்த உதவி எல்லோருக்கும் செய்யுங்கள். பிறர் வாழ்க்கையில் சுப காரியத்தில் பணத்தாலும், சரீரத்தாலும், மனத்தாலும் நல்லது செய்யவும். உங்கள் வாழ்க்கையில் நன்மை பன்மடங்கு வரும்.
Read More »

டிஸெம்பர் 2016 ராசி பலன்

மேஷம் 


குடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். குழந்தைகள் தொந்தரவு ஜாஸ்தி ஆக இருக்கும். கோவம் படாமல் பார்த்து டீல் செய்யுங்கள். காதல் விஷயத்திற்கு நல்ல நேரம். வேலையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுடைய பிளானிங் நூதனமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். பண வரவு ரொம்ப நன்றாக இல்லாவிட்டாலும் சேமிப்பு நன்றாக இருக்கும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்புடன் நீங்கள் டார்கெட்டை அசீவ் செய்வீர்கள். இருந்தாலும் வேளையில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆவதிகள் மனதில் திருப்தி இருக்காது.



அரச மரத்திற்கு தீபம் ஏற்றி ஜலம் அற்பணியுங்கள். ராஹு, சனி, செவ்வாய் பரிகாரம் மிகவும் நன்மையுடையடாக இருக்கும்.

ரிஷபம் 


இந்த மாதம் பேரின்பம், ஆனந்தம், அபிவ்ருத்தி நிறைந்ததாக இருக்கும். குருவின் நல்ல பார்வை இருக்கிறதால் அதிர்ஷ்டம், செல்வம் உங்கள் பக்கம். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் சம்பந்தங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் யோசனை, கருத்துகளை வரவேற்பார்கள். நீங்கள் நிரம்பவும் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பீர்கள். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறதிற்கு முன்பு நன்றாக யோசிக்கவும். ப்ராபர்ட்டி, வீடு, நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொலீக்ஸ் ரொம்பவே சப்போர்டிவ் ஆக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகள் பக்கத்திலிருந்து பிரச்சனை கட்டாயம் இருக்கும். ஆனால் கல்யாணம் செய்ய விரும்புவோர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம். 

செவ்வாய் கிரஹத்திற்கு பரிகாரம் செய்யுங்கள். அங்காரகனுக்கு ஸ்லோகம் படியுங்கள். பண விரயம் குறையும்.

மிதுனம் 


உங்கள் காரியத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால் செலவுகள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதற்கு இது உகந்த மான நேரம். அட்மினிஸ்ட்ரேடிவ் விவரங்களில் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம், எல்லோரிடமும் நன்றாக பழகவும். குடும்பத்திற்கு நிறைய டைம் கொடுப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாளவும். வாதம், விவாதம் இரண்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட்டிங் தேவைப்படும். நிலைமையை நிதானமாக மேனேஜ் செய்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.பண வரவு சுமாராக இருக்கும். செய்கிற வேலையில் கவனம் கொடுத்து செய்யுங்கள். உங்கள் வியாபாரம் விஷயமாக நீங்கள் அனுபவமுள்ளவர்களை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகள் குறையும். ஹெல்த் விஷயத்திற்கு இது சாதாரணமான சமயம். வேலையில் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் வொர்க் செய்யுங்கள். 

சனி யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை, ஆராதனை செய்யுங்கள்.

கடகம் 


சில தடங்கல்கள் உங்கள் கார்யக்ஷேத்திரத்தில் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமாக நீங்கள் உழைக்க வேண்டி வரும். உங்கள் பிளான், சின்னதோ பெரியதோ, இந்த மாதம் நிறைவு அடையும். இந்த மாதம் எல்லா விதத்திலும் மிகவும் சுபமாக முடியும். உங்கள் கடினமான உழைப்பிற்கு உங்கள் வெற்றி கண்ணாடி மாதிரி வேலை செய்யும். அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். லக் உங்கள் பக்கம் இருந்தாலும், ஹார்ட் வொர்க் செய்கிரதை விட மாட்டீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆதரவு இருந்தாலும் மனதில் ப்ரேஷேர் இருக்கத்தான் செய்யும்.குழந்தை வேண்டியவர்களுக்கு இது நல்ல சமயம். தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்வோரின் பாலிடிக்ஸ் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், பார்த்து சமாளியுங்கள். சிலர் தார்மீகம், ஆன்மீகம் போன்றவற்றில் இன்டெரெஸ்ட் எடுத்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி காக்க முயற்சி செயுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. 

கேது, செவ்வாய், சனி பரிகாரம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் நன்மை தரும்.

சிம்மம் 


இந்த மாதம் லைக் மைன்டெட் மனிதர்களுடன் காரியமும் சம்பந்தமும் செய்ய வேண்டி வரும். எவ்வளவு தான் நிலைமை மோசமாக இருந்தாலும், பாசிடிவ் ஆக திங்க் செய்யுங்கள், இருங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப அவசியம். அதை மறக்காதீர்கள். ப்ராப்பர்ட்டி விஷயத்தில் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம். காதல் விவகாரம் களிப்பு தரும். தாயின் ஆரோகியதில் கவனம் தேவை. கோவத்தை குறைத்து கொள்ளவும். தர்க்கம், விவாதம் அவாய்ட் செய்யுங்கள். கடன் எந்த ரூபத்திலும் வேண்டவே வேண்டாம். புதிய முயற்சியில் நல்லதொரு திருப்பம் இருக்கிறது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். உடல் ஆரோகியதில் மிக அதிகமாக கவனம் தேவை. 

பைரவருக்கு பூஜை ஆராதனை செய்யுங்கள். இது ஒரு பிரமாதமான ராஹு பரிகாரம்.

கன்னி

 

இந்த மாதம் மிஸ்ர பலன் கிடைக்கும். உங்கள் புத்தியை உபயோகம் செய்யது முன்னேற்றம் காணுங்கள். எதிரிகள் பிரச்சனை கிளம்புவார்கள். ஆனால் லக் உங்கள் பக்கம். அதனால் தைர்யமாக, சந்தோஷமாக இருங்கள். வீடு, மணை விஷயம் இந்த மாதம் வேண்டாம். செய்யும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். அமைதி, எல்லோரின் அன்பு இது தான் முக்கியம் என்று அறியுங்கள்.அக்கம் பக்கத்தவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவும். கேளிக்கை, குதூகலம் என்று லைஃப் என்ஜாய் செய்யுங்கள். பேசும் முறையில் நிதானம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ கருத்து வேற்றுமை இருந்தால், தர்க்கம் வேண்டாம். மன நிம்மதிக்கு ஆன்மீகத்தில் இறங்குங்கள். 

ஒரு முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். செல்ல விதத்திலும் நன்மை தரும்.

துலா 


ரொம்பவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம் இது. மன வேதனை, டென்ஷன் என்று பல விதமாக அமைதியின்மை இருக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். காதல் ஜோடிகள் கண்ணாம்பூச்சி விளையாடாமல் புரிந்து கொண்டு நடக்கவும். லைஃப் பார்ட்னருடன் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவும். சனி குரு கோசாரம் சரியாக இல்லாததால், வாழ்க்கை வெறுமையாக இருக்கிறமாதிரி இருக்கும். போக போக சரியாகும். எக்ஸ்ட்ரா முயற்சி செய்து பேலன்ஸ் பண்ணுங்கள். 

மூன்று முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். நல்லது செய்யும்.

விருச்சிகம் 


திடீர் என்று சில விஷயங்கள் நடக்கும். லக் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், உங்கள் கடின உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள். மனதிற்கு பிடிக்காமல் சில விஷயங்கள் நடக்கலாம், ஆனாலும் உங்கள் வில் பவரினால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு சரி செய்வீர்கள். வேளையில் மாற்றமோ உயர்வோ கடினமாக வொர்க் செய்தபிறகு வரும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். கடன் வாங்க நல்ல நேரம் இல்லை.பண வரவும் இருக்கும், செலவும் இருக்கும். எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஒரு நிலை இல்லாமல் தவிப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். டீச்சிங், மெடிக்கல், பேங்கிங் செக்டரில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 

சனி பரிகாரம், ஆஞ்சநேயர் பூஜை, குல குருவிற்கு மரியாதை மிகவும் நன்மை செய்யும்.

தனுசு 


தடங்கல் நிறைத்த மாதம். ஆனால் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் முன்னேறுவீர்கள். லாங் டேர்ம் பிளானிங் செய்தால் நல்லது. வேலை மாற்றம், டிரான்ஸ்ஃபர் விஷயங்களுக்காக வைட் செய்தவர்களுக்கு கூட் நியூஸ். உங்கள் ஸ்ரத்தை, நேர்மை, நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக மாறும். தாம்பத்திய உறவில் அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் இருக்கும். காதல் ஜோடிகள் என்ஜாய் செய்யலாம். டேட்டிங் விஷயத்திற்கும் நல்ல டைம்.பரிவாரக சுகம், அன்பு நிறைய இருக்கு, கிடைக்கவும் செய்யும். வேலையில் அந்தஸ்து உயரும், பண வருவாய் அதிகரிக்கும். 

கட்டுப்பாடு மிகவும் அவசியம். சனிக்கு என்ணை தீபம் ஏற்றுங்கள்.

மகரம் 


பரிவாராக சுகம், வேலையில் நிம்மதி, உற்றார் உறவினர் நட்பு, நண்பர்களின் ஆதரவு எல்லாம் வாழ்க்கையில் ஒரே இன்ப மயம், மகர ராசிகாரர்களே. பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எக்ஸ்ட்ரா எஃப்போர்ட்ஸ் கொடுக்க வேண்டி வரும். பணிவாகவும், மரியாதையாகவும் எல்லோரிடமும் இருந்தால், லைஃப் ரொம்ப ஸ்மூத் ஆக இருக்கும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும், திறமை அதிகரிக்கும், புத்தி கூர்மையாகும், வாக்கு சாதுர்யம், பேச்சில் மதுரம் இருக்கும். இது உங்களுக்கு ரொம்பவே நல்லது செய்யும். லாபம், பண வருவாய் அதிகரிக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். 

காயத்ரி மந்திரம் படியுங்கள். காலையில் விஷ்ணு பூஜை செய்யுங்கள்.

கும்பம் 


நீங்கள் நினைத்ததற்கு விஷயம் வேறு விதமாக மாறலாம். லக் மட்டும் போறாது. கடினமாக, மும்முரமாக உழைப்பு தேவை. வொர்க் ப்லேஸிலும் குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். பார்த்து கொள்ளுங்கள். நிதானமாக, அமைதியாக விஷயத்தை சால்வ் செய்யுங்கள். பண வருவாய் அதிகரிக்கும். கடனும் வாங்குவீர்கள். சேமிக்கவும் செய்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் எல்லோரும் கொஆப்ரெட் செய்வார்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ளவேண்டாம். 

செவ்வாய் கிழமை விரதம் மேற்கொள்ளவும். தான, தர்ம கார்யங்கள் மூலம் பரிகாரம் செய்யவும்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமை ஓங்கும், எல்லோரூம் மதிப்பார்கள், போற்றுவார்கள். கலை,சங்கீதம், இலக்கியம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் நிறைய இருக்கும். சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு பழி சுமத்துவார்கள். ஜாக்கிரதியாகவும் டைராயமாகவும் விஷயத்தை ஹேன்டில் செய்யவும். காதல் விவகாரத்தில் ப்ராப்ளேம் வராமல் பார்த்துக்கணும். இன்வெஸ்ட் பண்ணுகிறதிற்கு நல்ல நேரம் இல்லை. வெளி மனுஷர்கள் தலையீடு இருந்தால், ரொம்பவே மெதுவாக ஆனால் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லவும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்,சேமிப்பீர்கள். தான தர்மத்தில் செலவும் செய்வீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் தேவை. 

சனீஸ்வரனுக்கு ப்ரீதீ செய்யுங்கள். என்னை விளக்கு சனி கிழமை தோறும் அரச மரத்திற்கடியில் ஏற்றவும்.
Read More »

தீபாவளி ஸ்பெஷல் - 50% வரை தள்ளுபடி இரத்தினம், ருத்ராக்ஷம் மற்றும் யந்திரங்களில்.

ஆஸ்ட்ரோசேஜ்.காம் தரப்பிலிருந்து ஒரு சிறப்பு தள்ளுபடி, விஷேஷ தீபாவளி பண்டிகையில் மட்டும். எங்கள் உயர்ந்த ரக சாதனங்கள், பொருள்களை உபயோகித்து, பூஜை செய்து மகா கணபதி, மஹா லட்சுமி கடாக்ஷம் பெறலாம்.


Read More »

செப்டம்பர் 2016 ராசி பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த செப்டம்பர் 2016 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்


மேஷம்


குரு பகவான் ஆறாவது வீட்டிலும், சனி பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. மாதத்தின் முற்பகுதியில் க்ரஹணம் ஐந்தாவது வீட்டில் நடப்பதால், உங்கள் ஆரோக்கியதிற்கும், குழந்தைகளின் நலனுக்கும் நல்லது இல்லை. மன உளைச்சல், டென்ஷன் அதிகமாக இருக்கும் பண விரயம், தாம்பத்திய உறவில் க்லேஷம், குடும்ப உறவில் குழப்பம், குழந்தைகள் பக்கத்திலிருந்து பிடிவாதம், எதிர்ப்பு என்று நிறைய சிக்கல்கள் இருகின்றன. மாதத்தின் பிற்பகுதியில் ராசி நாதன் செவ்வாயும் சுக்ரனும் சிறிது பலம் பெற்று கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள். பொறுமையாக இருந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். கோவத்தில் எந்த டிஸிஷனும் எடுக்காதீர்கள்.

சனி குருவிற்கு ப்ரீத்தி செய்யுங்கள். அன்ன தானம், தீப தானம் , பெரியோர்களின் ஆசீர்வாதம் நன்மை தரும். சரஸ்வதி தேவிக்கு ஆராதனை செய்யுங்கள்.

ரிஷபம்


குரு பகவான் ஐந்தில் நல்ல கண்டிஷனில் இருந்தால் கூட, சிம்மத்தில் நடக்கிற கிரஹணத்தினால் வீட்டில் குழப்பம், பணி செய்யும் இடத்தில க்லேஷம் மேலதிகாரியின் அதிருப்தி போன்ற விஷயங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பெரிய தொகை கடனாக வாங்காதீர்கள். எந்த முடிவும் கோவத்திலோ ஆத்திரத்திலோ எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில மிக கவனமாக இருங்கள். யாரோடும் அதிகமாக பேச்சு-வார்த்தை வைத்து கொள்ளவேண்டாம், மிஸ்-கம்யூநிகேஷென் ஆக சான்ஸ் ஜாஸ்தி இருக்கிறது.குடும்பத்தில் சில சமயம் நிம்மதி நிலவினாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது மனது அலை பாயும்.உங்கள் லக்கில் மட்டும் டிபென்ட் ஆகாமல், உங்கள் அனுபவத்தையும், அனுமானத்தையும் பிரயோகத்தில் கொண்டு வாருங்கள்.

மஹா விஷ்ணுவிற்கும் மஹா லட்சுமிக்கும் பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் போல் கோவிலில் அரிசி, நெய், வெல்லம், பருப்பு வகையறாக்கள், தேங்காய் , ஊதுபத்தி, தீபம், தூபம், கற்பூரம் போன்றவைகளை தானம் செய்யுங்கள். ரேஷ் டிரைவிங் அவாய்ட் செய்யுங்கள்.

மிதுனம்


வேலை பார்க்கும் இடத்தில் கோவத்தை குறையுங்கள். தைரியமாகவும் சாதுர்யமாகவும் வேலையில் உள்ள தடங்கல்களை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வியாபாரத்தில் கடன் சம்பந்தமான விஷயங்களை பார்த்து ஹேன்டில் செய்யுங்கள். பண வருவாய், லாபம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் படு வேகமாக வ்ருத்தி அடையும். அதனால், எவ்வளவு சேமிப்பு செய்ய வேண்டுமோ, செய்யுங்கள். இன்பக்கேளிக்கையிலும் பொழுதுபோக்கிலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நம்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு கொடுக்கும். காதல் விவகாரத்தில் யோசித்து முடிவு எடுங்கள். நீங்கள் சொல்லும் சொல் ரொம்ப கடினமாகவும் முள் மாதிரி குத்தும். உங்கள் உறவிலும், நட்பிலும் இது ப்ராப்ளேம் உண்டு பண்ணலாம். பிஸினஸுக்கு இது உகந்த நேரம். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்திலும், உங்கள் குழந்தையின் நலனிலும் அக்கறை காட்டுங்கள்.

அஷ்டதாதுவில் (எட்டு உலோக கலவை) தயாரித்த ப்ரேஸ்லட் போட்டுக்கொள்ளுங்கள். ராஹுவுக்கு இது தான் சரியான பரிகாரம்.

கடகம்


இந்த மாதம் முழுவதும் நீங்கள் எனெர்ஜிடிக் ஆக இருப்பீர்கள். எந்தவிதமான விவாதத்தையும் அறவோடு தவிர்க்கவும். பார்ட்னெர்ஷிப்பில் லாபம் உண்டு. முன் செய்த வேலையின் பலன் இப்பொழுது கிடைக்கும். கார்யக்ஷேத்திரத்தில் பொறுப்புகள் ஜாஸ்தி ஆகும் விருத்தியும் உண்டாகும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் கவலை தரும். உறவுகளில் டென்ஷேன் நிலவும். பார்த்து மேனேஜ் செய்தால் நிம்மதி உங்களுக்கு தான்.

வியாபாரத்தில் லாபம் நிச்சயம், ஆனால் பெரும்பாடுபட்ட பின்பு தான். தைரியமாக சில முடிவுகள் எடுத்தால், உங்கள் அந்தஸ்தில் நல்ல மாற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். ஹெல்த் விஷயத்தில் எதுக்கும் ஹார்ட் செக்-அப் செய்து பாருங்கள். மற்றபடி அதிகம் கவலை பட வேண்டாம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீங்கள் உங்கள் மற்ற வாழ்க்கை ஸமாஜாராம் பிரச்னையை சமாளிக்க முடியும்.

கணேஷ சங்கு வையுங்கள். உங்கள் பாரிவாராக, சமூக, வர்த்தக, மானசீக, ஆரோக்கிய விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ஸிம்ஹம்


இந்த மாதம் உங்கள் குடும்ப சம்பந்தங்கள், பிசினெஸ் பார்ட்னெர்ஷிப் பாதை மேலும் கீழும் செல்லும். வேலை செய்யும் இடத்தில் ஆதரவும் சஹயோகம் கிடைக்கும். நீங்கள் பேசும் தோரணையை கொஞ்சம் மெதுவாகவும் வார்த்தைகளை இனிப்பாகவும் வைத்துக்கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை நீங்கள் குறைக்கலாம். இது நீங்கள் வியாபாரத்தை விரிவு செய்ய உதவியாக இருக்கும். குடும்ப உறவுகளில் உங்கள் அன்பும் வளைந்து கொடுக்கிற தன்மையும் தான் உறவுகளை பாதுகாக்க உதவும். தன்னம்பிக்கையோடு உங்கள் பென்டிங் வேலைகளை செய்து முடியுங்கள். எல்லா விஷயத்திலும் பாஸிடிவ் ஆக யோசியுங்கள். அனுபவமுள்ளவர்களின் உதவி எல்லா விதத்திலும் நல்லது செய்யும். வரவும் செலவும் சரியாக இருக்கும். உங்கள் கோவம், ஆத்திரம் எல்லாவற்றையும் குறைத்து கொண்டால் நிலைமை கட்டாயம் மாறும். வொர்க்-லைஃப் பேலன்ஸ் மெய்ன்டேன் பண்ணனும்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டு வட-கிழக்கு திசையை பார்த்து வைத்து பூஜை செய்யுங்கள்.

கன்னி


நிலைமை கொஞ்சம் செட்டில் இல்லாத மாதிரி இருக்கும். உங்களை நீங்களே அனலைஸ் செய்து, நிலைமையை வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மாற்ற முயலுங்கள். உங்கள் புத்தி கூர்மையும் வாக்கு சாதூர்யமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு நல்வழி காட்டும். பண வரவு பன்மடங்கு உயரும். நிறைய பொறுப்பும் கடினமாக உழைப்பும் மேல்கொள்ளுவீர்கள். தாம்பத்திய உறவில் உல்லாசமும் அனுசரித்து போகும் குணமும் நிறைந்து இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் காதல் மலரும். சிலர் மண வாழ்க்கையில் கால் எடுத்து வைப்பார்கள். ஆன்மீகம், தார்மீகம் போன்ற விஷயங்களில் உங்கள் கவனம் திரும்பும், ஆர்வம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவும் பதவி உயர்வும் அதிகரிக்கும். இத்தனை நாள் பிளான் செய்தவை இப்பொழுது நடக்கும். உங்கள் மொத்த கான்செண்ட்ரேஷென் செய்யும் வேலையில் இருக்கிறது ரொம்பவும் சிறப்பானது. இந்த குணம் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு போகும். ஹெல்த் விஷயத்தில் நீங்கள் சற்று நிதானமாகவும் கவனமாகவும் இருக்கணும். நெல்லிக்காய் கலந்த ஆயுர்வேத மருந்து உங்களுக்கு நல்லது செய்யும்.

கௌரி ஷங்கர ருத்திராக்ஷம் அணியலாம். குழந்தை ஆசை உள்ளவர்கள் சந்தான கோபால மந்திரம் ஜபிக்கலாம்.

துலா


இந்த மாதம் சொந்த தொழில் பிசினெஸ் செய்பவர்களுக்கு நல்ல நேரம். லக் உங்கள் பக்கம் இருக்கிறது, உங்களுக்கு கூடுதலான நன்மையும் கிடைக்கும். ஆனால் எந்த விஷயத்திலும் கவலை படாமல் காரியமே கண்ணாக இருங்கள். பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். வறட்டு கௌரவம் பார்க்காதீர்கள். இல்லையென்றால் வேலை செய்யும் இடத்தில் உறவுகளில் கசப்பு தன்மை இருக்கும். சில நாள்கள் கடுமையான டென்ஷன் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். உற்றார் உறவினர், குடும்பத்தினரிடம் மென்மையாக பழகுங்கள், கருத்து வேறுபாடு இருந்தால் பார்த்து மேனேஜ் பண்ணவும். வாதம், விவாதம் இதிலிருந்து தூர ஓடவும். உடல் ஆரோக்கியம் இந்த மாதம் மிகவும் முக்கியம். எலும்பு நோய், கண் நோய் போன்றவற்றிலிருந்து தப்பவும்.

யோக அப்யாசம், தியானம் முதலியவை நிம்மதி கொடுக்கும். ஃப்ங்க் ஷ்வே, வாஸ்து போன்றவற்றினால், வீட்டில் நல்ல வைப்ரேஷன்ஸ் கொண்டு வாருங்கள்.

விருச்சிகம்


இந்த மாதம் நீங்கள் புதிய முயற்சியில் இறங்குவீர்கள். கலை, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் பிரபலம் ஆவீர்கள். உங்கள் அந்தஸ்து சமூகத்தில் பன்மடங்கு உயரும். கம்பியூட்டர், அழகு சாதனங்கள், வஸ்திரம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் நிலவும். குழந்தைகள் விவகாரம் மனதில் சஞ்சலம் உண்டு பண்ணும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் கவலை தரும். பிரயாணம் செய்கிற பொழுது நிதானமாக செயல் படவும். உங்கள் பர்சனல் உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். பாரிவாரிக சுகம் இப்ப இல்லை. மனம் அலைபாயும். உடல் உபாதைகளும் கூடவே இருக்கும். ஜாக்கிரதையாக கையாளுங்கள். வீண் சண்டை, உட் பூசல்களிலிருந்து தூர இருங்கள். மாத கடைசியில் பண வருவாய் மிகவும் பலமாக இருக்கும். ப்ரமோஷன் பற்றின விஷயங்கள் சூடு பிடிக்கும். இன்வெஸ்ட்மென்ட் செய்கிரத்திற்கு இது நல்ல நேரம்.

சனி கோவிலில் எண்ணெய், எள், உளுத்தம் பருப்பு, கருப்பு வண்ண வஸ்திரம் போன்றவை தானம் செய்யவும். ஏழை எளியோர்களுக்கு அன்ன தானம் பண்ணுங்கள். சுந்தர காண்டம் படிக்கலாம். காகத்திற்கு ஒரு வாய் எடுத்து வைத்து பின்பு சாப்பிடவும்.

தனுசு

உங்கள் கார்ய க்ஷேத்ரத்தில் முன்னேறுகிறதிற்கு தைர்யமாக கால் எடுத்து வையுங்கள். தன லாபம், திருப்தி உண்டாகும். வொர்க் லோட் அதிகரித்தாலும், கூடவே பண வருவாயும் ஜாஸ்தி ஆகும். உங்கள் தீர்மானங்களை ஸ்மார்ட்டாக ஆனால் உடனே எடுங்கள். பெரியோர்களின் ஆதரவு இருக்கிறது. குடும்பத்தில் கிலேசம் உண்டாகும். பார்த்து மேனேஜ் செய்யவும். எல்லோரிடமும் ஜாக்கிரதையாக பேசவும், பழகவும். செலவுகளில் மீது ஒரு கண் வையுங்கள். வாகனம், தங்கம், வீடு, மனை போன்ற விஷயங்களுக்கு இப்பொழு நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பிசினெஸில் இருக்கிறவர்கள் வளம் காண்பார்கள். வேலை பொறுப்புகள் காரணமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். நன்றாக காய்கறி பழவகையறாக்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளவும், ஜங்க் ஃபுட் கட்டாயம் அவாய்ட் பண்ணுங்கள் .

வீட்டில் நித்திய பூஜை ஆராதனை செய்யுங்கள். வேண்டாத மரச்சாமான்கள் தலையை சுற்றி தூர எறியுங்கள்.

மகரம்


பிசினெஸ் செய்கிறவர்களுக்கு இது உகந்த நேரம். எதிர் பாராத விதமாக லாபம் தேடி வரும். குடும்ப, தாம்பத்திய உறவுகளில் அன்பு, அரவணைப்பு இருக்கும். கோவம், ஆவேசம் போன்ற குணங்களை அறவே ஒழித்திடுங்கள். அலைபாயும் மனதை கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்கள் விருப்பம் போல் சில விஷயங்கள், வீட்டு மனுஷர்கள் நடக்க வில்லை என்றால் கவலை வேண்டாம். சாமர்த்தியமாக டீல் செய்யுங்கள். ஈகோவை விட்டு விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். ப்ரொபேர்ட்டி சம்பந்த விஷயங்களில் டாகுமெண்ட்ஸ் சரியாக உள்ளதா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை பாருங்கள். எதிரிகள், முன் பின் தெரியாதவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆஞ்சநேயரை முழுமனதாக பூஜியுங்கள். உங்கள் மிகவும் நல்லது.

கும்பம்


இந்த மாதம் மீடியா, ஆர்ட்ஸ் சம்பந்த விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும். கொஞ்சம் டைம் எடுத்து கொண்டு ஏழை எளியோர்களுக்கு சேவை, தானம் செய்யுங்கள். உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும். மனதை கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள். உணர்ச்சி வசப்படாமல் யோசியுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவணும் என்றால், எல்லோரையும் சுற்றுலா/பிரயாணம் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். வரவு செலவு சமமாக இருக்கும். புதிதாக கார்யம் ஒன்றும் ஆரம்பிக்க வேண்டாம். உங்கள் கடினமான உழைப்பிற்கு நன்றாக பலன் கிடைக்கும். ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து திடீர் பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் அவசியம். யோகா, மெடிடேஷன் உங்களை படு ஆக்டிவ் ஆக்கி விடும்.

கணேஷ ஸ்துதி சொல்லுங்கள். தான தார்மத்தில் மனதை செலுத்துங்கள். சனி வார உபவாசம் மேற்கொள்ளுங்கள். நன்மை தரும்.

மீனம்


பெரியோர்களின் போதனை, அட்வைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள். உங்கள்ளுக்கு நல்லது. வீடு மனை வாங்குவீர்கள் அல்லது விற்பீர்கள். கெட்ட சகவாசம், கெட்ட பழக்க வழக்கங்களிடம் இருந்து தள்ளி இருங்கள். முன் பின் அறியாதவர்களிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். காதல் ஜோடிகளுக்கு பிரமாதமான நேரம். ஆன்மீகம், தத்துவம் போன்ற விஷயங்கள் உங்களை கவரும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருங்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சிலர் வாழ்க்கையில் மங்களகரமான கார்யங்கள் நடக்கும். ஆரோகியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டில் வைத்து பூஜை செயுங்கள். எல்லா விஷயத்திலும் மேலும் மேலும் நன்மை உண்டாகும்.
Read More »