ஜனவரி 2017 ராசி பலன்


உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஜனவரி 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்

மேஷம்


ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்வதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் காரியத்தில் இறங்குவீர்கள். எதிர்பாராதவிதமாக லாபம் காண்பீர்கள். செய்யும் வேலையில் உயர்வு கட்டாயம். சக ஊழியர்களிடம் மற்றும் உச்ச அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது நல்லது. வேலை மாற்றம் எதிர்பார்த்து கொண்டிருப்போர்களுக்கு இது நல்ல சமயம், கட்டாயம் பிரமாதமான வாய்ப்பு கிடைக்கும். அஷ்டம சனி காரணமாக குடும்பத்திலோ அல்லது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படலாம். இது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும். ராகுவின் ஐந்தாம் இட கோச்சாரம் பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய விஷயங்களில் தொந்தரவு கொடுக்கும். இந்த சமயம் கார்யம் சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். வ்யாபாரத்திலிருப்போர் நிதானமாக செயல் பட வேண்டிய நேரம். ஜாஸ்தி முதலீடு போடாமல் இருப்பது நன்மை தரும். கலைகள், இயந்திரங்கள், அழகு சம்பந்தமான விஷயங்களில் வேலை பார்ப்போர் லாபம் எதிர்பார்க்கலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து போங்கள். நிம்மதியும் குதூகலமும் காண்பீர்கள். உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. 

தாம்பரத்தில் அல்லது தங்கத்தில் ஆன வளையல் உபயோகித்தால் நன்மை தரும். 

ரிஷபம்


ராசிநாதன் சுக்கிரனின் பத்தாம் இட கோச்சாரம் காரணமாக நீங்கள் மிகவும் உல்லாசமும் உத்வேகமும் காண்பீர்கள். பணியில் உள்ளோர் மேல் அதிகாரிகளிடம் இருந்து புகழ் பெறுவார்கள். மாத கடைசியில் சனி எட்டாம் இடமான தனுசு ராசியில் பெயர்ச்சி செய்கிறார். கார்ய க்ஷேத்திரத்தில் மாற்றம் அல்லது வேலை சம்பந்தமாக பிரயாணம் செய்ய நேரிடலாம். குருவின் ஐந்தாம் சஞ்சாரம் எல்லா விதத்திலும் நன்மை தரும். செய்யும் வேலையை புத்துணர்வுடன் கவனமாக செய்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். இரும்பு, ஆட்டோமொபைல், ஆடம்பரமான சாமான்கள், நூதன பொருட்கள் சம்பந்தமான வியாபாரிகள் பெருமளவில் வளர்ச்சி காண்பார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பில் வேகமாக முன்னேறுவார்கள்; புத்தி சாதுர்யத்தினால் பாராட்டும் பெறுவார்கள். ராகுவின் நான்காம் வீட்டு சஞ்சாரம் தாயின் உடல் ஆரோகியத்தை பாதிக்கலாம். ஏதாவது தீர்த்த யாத்திரை மேற்க்கொள்வீர்கள். சகோதரர்களும் மித்திரர்களும் பூரண ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும், ஆனால் பண விஷயத்தில், கொடுக்கல் வாங்கல் மற்றும் முதலீட்டில் கவனக்குறைவு பிரச்சினைகளை கிளப்பும். இந்த மாதம் உடல் நலமும், மன நிம்மதியும் தரும்.

கன்யா குழந்தைகளுக்கு தித்திப்பு வாங்கி கொடுங்கள். பெண்களிடம் அன்பாக இருங்கள். நலன் பெறுவீர்கள். 

மிதுனம்


இந்த மாதம் உங்கள் ராசிநாதன் புதன் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்கள் உடலில் திடமும் உள்ளத்தில் நிம்மதியும் இருக்கும். வேலையிலும் மனதை ஒருமுகப்படுத்தி செயல் படுவீர்கள். மூன்றாம் வீட்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் நிறைய தைர்யமும், வேலையில் கடினமாக உழைக்கும் திறனும் கிடைக்கும். குருவின் கோச்சாரம், செய்யும் பணியில் ஒரு நல்ல திருப்பத்தை தரும். சனியின் ஆறாம் வீட்டு சஞ்சாரம் எதிரிகளையும் விரோதிகளையம் அடங்க வைக்கும். மாணவர்கள் எந்த விதமான போட்டியிலும் வெற்றி காண்பார்கள். சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து 11ஆம் வீட்டில் கோச்சாரம் செய்வது குழந்தைகளுக்கு நல்லது செய்யும். நீங்களும் மனா நிறைவும் பண நிறைவும் பெறுவீர்கள். மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டு. செவ்வாய் ஒன்பதில் இருப்பது தந்தையின் உடல் நலனுக்கு சற்று கெடுதல் செய்யலாம். ஜாக்கிரதையாக இருக்கவும். 

பச்சை நிற ஆடை அணியவும்; வெண்கல வளையல் மற்றும் பாத்திரம் உபயோகிக்கவும்.

கடகம்


ராகுவின் இரண்டாம் வீட்டு கோச்சாரம் பண தட்டுப்பாடும், பண விவகாரத்தில் பிரச்னைகளையும் உண்டு பண்ணும். சிலர் குடும்பத்தை விட்டு தூர செல்வார்கள். மூன்றாம் வீட்டில் உள்ள குருவினால் நினைக்க முடியாத கார்யங்கள் முடிக்க வாய்ப்பு உள்ளது. கூட பிறந்தோர் உடல் நிலை கவலை தரும். ஐந்தில் இருக்கும் சனி குழந்தைகலின் படிப்பில் தடங்கல் செய்யலாம். உங்கள் மன நிம்மதியையும் பாதிக்கும். வாழ்க்கை துணையுடன் ஒத்து போனால் ரொம்பவே நல்லது. வயறு சம்பந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. தந்தையின் ஆரோக்கியம் சந்தோஷம் தரும். தாயின்உடல் நலம் சீராக இருக்காது. மாணவர்கள் மிகவும் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டி வரும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் செவ்வாயும் செய்யும் தொழிலில் பிரச்னைகள் உண்டு பண்ணுவார்கள்; ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். மேல் அதிகாரிகளிடம் மற்றும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகவும். வரம்பு மீறாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது.

வீட்டில் அக்வேரியம் வைத்து மீன்களுக்கு தீனி போடுங்கள். வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.

சிம்மம்


குருவின் இரண்டாவது இட சஞ்சாரம் குடும்பத்தில் சந்தோஷம் தரும். உற்றார் உறவினர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை மலரும். இனிமையான வாக்கின் மூலம் எல்லோர் மனதையும் கவருவீர்கள். உங்கள் கௌரவம், மதிப்பு நாளுக்கு நாள் ஓங்கும். ஜென்மத்தில் ராகு இருப்பதினால், ஆரோகியத்தில் கவனக்குறைவு பிரச்னைகள் கொண்டு வரும். சனியின் நான்காவது வீடு சஞ்சாரம் மன நிறைவை குறைக்கும் மற்றும் தாய் உடல் ஆரோகியத்தை கெடுக்கும். சூர்யன், புதன் சேர்க்கை புத்தி சாதூர்யத்தை வளர்க்க உதவும். ஐந்தாம் வீட்டில் இந்த புத-ஆதித்ய யோகம் தன்த்ரம், மன்த்ரம் மற்றும் கல்விக்கு மிகவும் உகந்தது. ஏழாவது வீட்டில் செவ்வாய், சுக்கிரன் கோச்சாரம் உத்யோகத்தில் நல்ல பலன் தரும். வியாபாரத்திலும், செய்யும் தொழிலிலும் கடுமையான உழைப்பினால் வேகமாக முன்னேறுவீர்கள். வேலை சம்பந்தமாக வெகு தூர பிரயாணம் செய்ய நேரிடும். ஏழாவதில் இருக்கும் கேது வாழ்க்கை துணையின் உடல் நிலையை பாதிக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது.

சூர்ய நமஸ்காரம் செய்யவும்; சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிற கைக்குட்டை நல்ல பலன் தரும். 

கன்யா


ஜென்மத்தில் இருக்கும் குருவினால் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மனம் ஸ்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏதோ மனது பாரம் குறைந்தது போன்று இருக்கும். பன்னிரண்டில் கோச்சாரம் செய்யும் ராஹுவினால் வெளிநாட்டிலிருந்து லாபம் வர வாய்ப்பு இருக்கிறது. கூடவே தூக்கமின்மையும் கால் சம்பந்த பட்ட பிரச்னையும் சிலருக்கு வரலாம். மூன்றில் இருக்கும் சனியினால் பராக்கிரமமும் தைர்யமும் அதிகரிக்கும். நீங்கள் முன்பை விட அதிகம் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் காட்சி அளிப்பீர்கள். ஒரே சமயத்தில் பல கார்யங்கள் செய்து முடிக்கும் திறன் வைப்பீர்கள். உங்கள் தகப்பனாரின் ஆரோக்கிய சம்பந்தமான எந்த விஷயத்திலும் ஆஜாக்கிரதை ஆபத்தில் கொண்டு விடும். நாலில் இருக்கும் புத-சூர்யனின் சேர்க்கையினால் மனதில் அமைதியின்மை உணர்வீர்கள். வாழ்க்கை துணையின் அன்பும் உதவியும் மனப்பூர்வமாக கிடைக்கும். ஆறில் இருக்கும் செவ்வாய் கேது சேர்க்கை உங்களை பல மடங்கு உழைக்கவும் எடுத்த காரியத்தை முடிக்கும் தைர்யம் கொடுக்கும். எதிரிகள் தொந்தரவு கிடையாது. மாணவர்கள் எந்தவிதமான போட்டி தேர்விலும் கடினத்துடன் உற்சாகத்துடன் உழைத்து வெற்றி காண்பார்கள். 

ஏழை மாணவர்களுக்கு படிப்பு சம்பமான உதவி பண்ணுங்கள். சுப பலன் கிடைக்கும்.

துலாம்


கோச்சார சனி இரண்டாம் இடத்தில் இருந்து திடீர் பண வரவை குறிக்கிறார். பன்னிரண்டில் உள்ள குரு சஞ்சாரம் பாரிவாரக சந்தோஷத்தை மேம்படுத்தும். மாணவர்கள் படிப்பில் நல்ல பெயர் வாங்குவார்கள். ராகுவின் 11 ஆம் வீட்டு சஞ்சாரம் எல்லா விதத்திலும் லாபம் அளிக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குமியும். சூர்யன்-புதன் 3 ஆம் இட கோச்சாரம் உங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும். எடுத்த காரியத்தை குறைவில்லாமல் முடித்து கொடுப்பீர்கள். கூடப்பிறந்தோர் உதவியினால் உங்களுக்கு தனலாபம் கட்டாயம். உங்கள் வாழ்க்கைத்துணையின் மூலம் ஏதேனும் லாபமோ, நல்ல செய்தியோ கிடைக்கும். குழந்தைகளிடம் அன்பாக ஆனால் கண்டிப்பாகவும் இருந்தால் நல்லது. எல்லோருடனும் சம்பந்தங்கள் நன்றாக இருந்தாலும், இந்த சமயம் உங்கள் வாழ்க்கை துணைக்கு அசௌகரியம் ஏற்பலாம். உடனே கவனிக்கவும்.

பெண்மணிகளுக்கு பட்டு ஆடை, தாம்பூலம், பூ, பழம் மற்றும் மஞ்சள்-குங்குமம் கொடுத்து உபசரியுங்கள்.

வ்ருச்சிகம்


இந்த மாதம் ஜென்மத்தில் சனியின் சஞ்சாரம் நடக்கிறது. உடல் மற்றும் மன ஆரோகியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். குருவின் 11ஆம் வீட்டு கோச்சாரம், சகோதரர்களுக்கு நன்மை செய்யும். அவர்களது அன்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்கள் புத்தி சாதூர்யத்தினால் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள்; மனதில் சந்தோஷம் நிலவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். சிலரின் பிள்ளைகள் சாதனை படைப்பார்கள். விவாக சம்பந்தத்தில் நிம்மதி நிலவும்; பரிவாரகத்தில் குதூகலம் காண்பீர்கள். வாழ்க்கை துணைக்கு சமூகத்தில் நல்ல பெயர், பாராட்டு கிடைக்கும். ராகுவின் 10 ஆம் வீட்டு சஞ்சாரம் செய்யும் பணியில் மாற்றம் மற்றும் எதிர்பாரா திருப்பம் கொண்டு வரும். கேதுவின் நான்காம் இட கோச்சாரம் இல்லறத்தில் மாற்றம் கொண்டு வரும். வேலை விஷயமாக வெளிநாட்டு பிரயாணம் கூடல் சிலர் செய்யலாம். தாயில் உடல் நலம் கவலை தரலாம். வீட்டிற்கு அழகு சாமான் வாங்கி அலங்காரம் செய்வீர்கள்.

மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டாம்; தொந்தரவு கொடுக்க வேண்டாம். கெட்ட பழக்கங்களை அறவோடு நிறுத்தவும். சுகமாக இருப்பீர்கள்.

தனுசு


இந்த மாதம், ஜென்மத்தில் சூர்யன்-புதன் சேர்க்கை உங்களை வாழ்க்கையின் உச்சிக்கு கொண்டு போகும். செய்யும் வேலையில் புகழும் பாராட்டும் குமியும். மேல் அதிகாரிகள் உங்கள் வேலை செய்யும் திறனை பார்த்து பிரமித்து போவார்கள். உன்னதமான நிலை, ப்ரமோஷன், பண உயர்வு மற்றும் வேலையில் திருப்தி போன்ற நல்ல சமாச்சாரங்கள் நடக்கும். ஒன்பதில் இருக்கும் ராகு சஞ்சாரத்தினால் வெளியூர் பிரயாணம் செய்யலாம். இந்த சமயம் ஏதாவது தீர்த்த யாத்திரை அல்லது ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்ட பிரயாணம் கூட நீங்கள் மேற்கொள்ளலாம். தந்தையின் உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. ராசிநாதன் குருவின் பத்தாம் வீடு கோச்சாரம் உங்களுக்கு வேலையில் அபாரமான வெற்றியும், உயர்வும் கிடைக்க உதவும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். உடல் நிலைக்கு நல்ல கவனம் கொடுத்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். சனியின் 12 ஆம் வீட்டு சஞ்சாரம் கவலை தன்தாலும், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தியோ அல்லது லாபமோ கிட்ட வழி வகுக்கும். மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய்-கேது கோச்சாரம் சகோதர சம்பந்தங்களுக்கு பிரச்சனைகள் கொடுக்கலாம்.

சோம்பலை அறவோடு மறந்து வேலையில் இறங்குங்கள்; ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும்.

மகரம்


ராசிநாதன் சனியின் 11ஆம் வீட்டு கோச்சாரம் உங்களுக்கு நல்லது செய்யும். நீங்கள் ரொம்பவும் எனெர்ஜிடிக் மற்றும் பாஸிட்டிவ் ஆக உணர்வீர்கள். ஆரோகியத்திலும் சௌகர்யத்திலும் நிறைவு இருக்கும். இருந்தாலும் ராகுவின் 8ஆம் ஐடா சஞ்சாரம் எல்லா விதத்திலும் கவனமாக இருக்கும் படி வலியுறுத்துகிறது. வெகுதூர பிரயாணம் மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும்; உடனே கவனியுங்கள். குருவின் 9ஆம் வீட்டு கோச்சாரம் உங்களின் பாக்கியத்தை பிரகாசிக்க வைக்கும். நீங்கள் சாகசமாக வேலையில் இறங்குவீர்கள். கூட பிறந்தோர்களுக்கும் இந்த வேளை நல்ல வாய்ப்புகள் கொண்டு வரும். நீங்கள் ஏதாவது தார்மீக அல்லது ஆன்மீக சங்கத்துடன் சேர்ந்து நல்ல பயனுள்ள கார்யம் செய்வீர்கள். சூர்யன்-புதன் சேர்க்கை 12இல் வேலை சம்பந்த வெகு தூர பிரயாணம் கொடுக்கும். இது உங்களுக்கு நன்மை தர வல்லது. கேது, செவ்வாய், சுக்ரனின் 2ஆம் இட சஞ்சாரம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் பிரச்னைகள் கொண்டு வரலாம். 

சைவ உணவு உட்கொள்ளுங்கள். போதை தரும் பதார்த்தங்களிடம் இருந்து தூர இருங்கள்.

கும்பம்


ராசிநாதன் சனி 10ஆம் இடத்தில் இருக்கிறார்; கடினமாக உழைக்க வேண்டி வரும். ரொம்பவும் பாடு பட்டு எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். ஜென்மத்தில் கேது சுக்கிரன் சஞ்சாரம் தாய் அல்லது தந்தை ஆரோக்கியதை பாதிக்கும். உங்கள் உடல் நலன் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சகோதரர்களின் பூர்ண சஹயோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆழமாக இயங்குவீர்கள். தார்மீக யாத்திரையும் பண்ணுவீர்கள். குருவின் 8ஆம் இட கோச்சாரம் ஆழ்ந்த மற்றும் மர்மமான ஆன்மீக விஷயத்தில் ஆய்வும். ஆர்வமும் மேம்படுத்தும். இந்த தருணத்தில் எதிர்பாராவிதமாக தன லாபம் பெறுவீர்கள். பாரிவாரகத்தில் திருப்தி, சந்தோசம் நிலவுவதற்கு நீங்கள் நன்றாக பிரயத்தனம் செய்வீர்கள். புதன்-சூர்யன் 11ஆம் இட சஞ்சாரம் ஷேர் மார்க்கெட்டில் மற்றும் ஸ்பெகுலேஷனில் திடீர் லாபத்தை கொடுக்கும். வியாபாரத்திலும் வளர்ச்சி காண்பீர்கள். ஆனால் பெரிய முதலீடு செய்யும் முன் நிதானமாக செயல் படவும். ராகுவின் 7ஆம் இட சஞ்சாரம் காரணமாக கவனக்குறைவிற்கு இடம் இல்லை.

மற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக்காதீர்கள். அன்பாகவும், நியாயமாகவும் செயல் படுங்கள். ஏழை எளியோர்களுக்கு தான தர்மம் செய்யுங்கள்.

மீனம்


ராசிநாதன் குருவின் கோச்சாரம் 7ஆம் பாவத்திலும், சனியின் சஞ்சாரம் 9ஆம் வீட்டிலும் இருப்பதனால், செய்யும் வேலையில் குறைந்த உழைப்புடன் நிறைய பாராட்டுகிட்டும். ஸ்நேகிதர்களிடமும் சகோதரர்களிடமிருந்தும் நிறைய ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகள் மேல் உங்கள் கை ஓங்கும், அதனால் அவர்கள் பணிந்து போவார்கள். சனியின் கோச்சாரம் தகப்பனாரின் ஆரோகியத்தை பாதிக்கலாம். ராகுவின் 6ஆம் இட சஞ்சாரத்தினால் போட்டி தேர்வுக்காக தயார் செய்யும் மாணவர்கள் பெரிய அளவில் சாதனை செய்து வெற்றி பெறுவார்கள். தைர்யமாகவும் சாகசமாகவும் வாழ்க்கையை சந்திப்பீர்கள். குருவின் பார்வை ஜென்மத்தில் இருப்பதால், உங்கள் புலனும், அறிவும், திறமையும் பளிச்சிடும். வாழ்க்கைத்துணையுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துவீர்கள். வேலை சம்பந்தமாக சிலர் தூர பயணம் மேற்கொள்வார்கள். சூர்யன்-புதன் 10ஆம் இடத்தில் கோச்சாரம் செய்வதால், வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர், பாராட்டு, புகழ், மதிப்பு எல்லாம் கிடைக்கும். தாயில் உடல் நலத்தில் அக்கறை தேவை. கேது-செவ்வாய்-சுக்கிரன் 12இல் இருப்பதனால், நித்திரையின்மையினால் பாதிக்கப்படலாம்.

உங்களால் முடிந்த உதவி எல்லோருக்கும் செய்யுங்கள். பிறர் வாழ்க்கையில் சுப காரியத்தில் பணத்தாலும், சரீரத்தாலும், மனத்தாலும் நல்லது செய்யவும். உங்கள் வாழ்க்கையில் நன்மை பன்மடங்கு வரும்.
Read More »

டிஸெம்பர் 2016 ராசி பலன்

மேஷம் 


குடும்பத்தினருடன், சொல்ல போனால் தாயுடன், உறவு இம்ப்ரூவ் பண்ணுங்கள். எல்லோரையும் அணைத்து கொண்டு போங்கள். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். குழந்தைகள் தொந்தரவு ஜாஸ்தி ஆக இருக்கும். கோவம் படாமல் பார்த்து டீல் செய்யுங்கள். காதல் விஷயத்திற்கு நல்ல நேரம். வேலையில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்களுடைய பிளானிங் நூதனமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். பண வரவு ரொம்ப நன்றாக இல்லாவிட்டாலும் சேமிப்பு நன்றாக இருக்கும். வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்புடன் நீங்கள் டார்கெட்டை அசீவ் செய்வீர்கள். இருந்தாலும் வேளையில் ஸ்ட்ரெஸ் அதிகம் ஆவதிகள் மனதில் திருப்தி இருக்காது.



அரச மரத்திற்கு தீபம் ஏற்றி ஜலம் அற்பணியுங்கள். ராஹு, சனி, செவ்வாய் பரிகாரம் மிகவும் நன்மையுடையடாக இருக்கும்.

ரிஷபம் 


இந்த மாதம் பேரின்பம், ஆனந்தம், அபிவ்ருத்தி நிறைந்ததாக இருக்கும். குருவின் நல்ல பார்வை இருக்கிறதால் அதிர்ஷ்டம், செல்வம் உங்கள் பக்கம். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் சம்பந்தங்கள் சிறப்பாக இருக்கும். உங்கள் யோசனை, கருத்துகளை வரவேற்பார்கள். நீங்கள் நிரம்பவும் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பீர்கள். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்கிறதிற்கு முன்பு நன்றாக யோசிக்கவும். ப்ராபர்ட்டி, வீடு, நன்றாக யோசித்து முடிவெடுக்கவும். வேலை செய்யும் இடத்தில் கொலீக்ஸ் ரொம்பவே சப்போர்டிவ் ஆக இருப்பார்கள். ஆனால் மேலதிகாரிகள் பக்கத்திலிருந்து பிரச்சனை கட்டாயம் இருக்கும். ஆனால் கல்யாணம் செய்ய விரும்புவோர்களுக்கு இது ரொம்பவே நல்ல நேரம். 

செவ்வாய் கிரஹத்திற்கு பரிகாரம் செய்யுங்கள். அங்காரகனுக்கு ஸ்லோகம் படியுங்கள். பண விரயம் குறையும்.

மிதுனம் 


உங்கள் காரியத்தை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால் செலவுகள் மீது ஒரு கண் வைத்து கொள்ளவும். ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வதற்கு இது உகந்த மான நேரம். அட்மினிஸ்ட்ரேடிவ் விவரங்களில் உங்கள் ஆற்றல் பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம், எல்லோரிடமும் நன்றாக பழகவும். குடும்பத்திற்கு நிறைய டைம் கொடுப்பீர்கள். தாம்பத்திய உறவில் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாளவும். வாதம், விவாதம் இரண்டிற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட்டிங் தேவைப்படும். நிலைமையை நிதானமாக மேனேஜ் செய்து அவர்களுக்கு புரிய வையுங்கள்.பண வரவு சுமாராக இருக்கும். செய்கிற வேலையில் கவனம் கொடுத்து செய்யுங்கள். உங்கள் வியாபாரம் விஷயமாக நீங்கள் அனுபவமுள்ளவர்களை சந்திப்பீர்கள். உங்கள் செலவுகள் குறையும். ஹெல்த் விஷயத்திற்கு இது சாதாரணமான சமயம். வேலையில் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காமல் வொர்க் செய்யுங்கள். 

சனி யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை, ஆராதனை செய்யுங்கள்.

கடகம் 


சில தடங்கல்கள் உங்கள் கார்யக்ஷேத்திரத்தில் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமாக நீங்கள் உழைக்க வேண்டி வரும். உங்கள் பிளான், சின்னதோ பெரியதோ, இந்த மாதம் நிறைவு அடையும். இந்த மாதம் எல்லா விதத்திலும் மிகவும் சுபமாக முடியும். உங்கள் கடினமான உழைப்பிற்கு உங்கள் வெற்றி கண்ணாடி மாதிரி வேலை செய்யும். அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். லக் உங்கள் பக்கம் இருந்தாலும், ஹார்ட் வொர்க் செய்கிரதை விட மாட்டீர்கள். நண்பர்கள், குடும்பத்தினர்கள் ஆதரவு இருந்தாலும் மனதில் ப்ரேஷேர் இருக்கத்தான் செய்யும்.குழந்தை வேண்டியவர்களுக்கு இது நல்ல சமயம். தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்வோரின் பாலிடிக்ஸ் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், பார்த்து சமாளியுங்கள். சிலர் தார்மீகம், ஆன்மீகம் போன்றவற்றில் இன்டெரெஸ்ட் எடுத்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி காக்க முயற்சி செயுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. 

கேது, செவ்வாய், சனி பரிகாரம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் நன்மை தரும்.

சிம்மம் 


இந்த மாதம் லைக் மைன்டெட் மனிதர்களுடன் காரியமும் சம்பந்தமும் செய்ய வேண்டி வரும். எவ்வளவு தான் நிலைமை மோசமாக இருந்தாலும், பாசிடிவ் ஆக திங்க் செய்யுங்கள், இருங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கிறது ரொம்ப அவசியம். அதை மறக்காதீர்கள். ப்ராப்பர்ட்டி விஷயத்தில் இன்வெஸ்ட்மென்ட் வேண்டாம். காதல் விவகாரம் களிப்பு தரும். தாயின் ஆரோகியதில் கவனம் தேவை. கோவத்தை குறைத்து கொள்ளவும். தர்க்கம், விவாதம் அவாய்ட் செய்யுங்கள். கடன் எந்த ரூபத்திலும் வேண்டவே வேண்டாம். புதிய முயற்சியில் நல்லதொரு திருப்பம் இருக்கிறது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். உடல் ஆரோகியதில் மிக அதிகமாக கவனம் தேவை. 

பைரவருக்கு பூஜை ஆராதனை செய்யுங்கள். இது ஒரு பிரமாதமான ராஹு பரிகாரம்.

கன்னி

 

இந்த மாதம் மிஸ்ர பலன் கிடைக்கும். உங்கள் புத்தியை உபயோகம் செய்யது முன்னேற்றம் காணுங்கள். எதிரிகள் பிரச்சனை கிளம்புவார்கள். ஆனால் லக் உங்கள் பக்கம். அதனால் தைர்யமாக, சந்தோஷமாக இருங்கள். வீடு, மணை விஷயம் இந்த மாதம் வேண்டாம். செய்யும் வேலையை கவனமாக செய்யுங்கள். இல்லாவிட்டால் பிரச்னை கட்டாயம் வரும். அமைதி, எல்லோரின் அன்பு இது தான் முக்கியம் என்று அறியுங்கள்.அக்கம் பக்கத்தவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவும். கேளிக்கை, குதூகலம் என்று லைஃப் என்ஜாய் செய்யுங்கள். பேசும் முறையில் நிதானம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கவும். வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ கருத்து வேற்றுமை இருந்தால், தர்க்கம் வேண்டாம். மன நிம்மதிக்கு ஆன்மீகத்தில் இறங்குங்கள். 

ஒரு முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். செல்ல விதத்திலும் நன்மை தரும்.

துலா 


ரொம்பவும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய மாதம் இது. மன வேதனை, டென்ஷன் என்று பல விதமாக அமைதியின்மை இருக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். காதல் ஜோடிகள் கண்ணாம்பூச்சி விளையாடாமல் புரிந்து கொண்டு நடக்கவும். லைஃப் பார்ட்னருடன் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்கவும். சனி குரு கோசாரம் சரியாக இல்லாததால், வாழ்க்கை வெறுமையாக இருக்கிறமாதிரி இருக்கும். போக போக சரியாகும். எக்ஸ்ட்ரா முயற்சி செய்து பேலன்ஸ் பண்ணுங்கள். 

மூன்று முகி ருத்திராக்ஷம் அணியுங்கள். நல்லது செய்யும்.

விருச்சிகம் 


திடீர் என்று சில விஷயங்கள் நடக்கும். லக் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், உங்கள் கடின உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள். மனதிற்கு பிடிக்காமல் சில விஷயங்கள் நடக்கலாம், ஆனாலும் உங்கள் வில் பவரினால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு சரி செய்வீர்கள். வேளையில் மாற்றமோ உயர்வோ கடினமாக வொர்க் செய்தபிறகு வரும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். கடன் வாங்க நல்ல நேரம் இல்லை.பண வரவும் இருக்கும், செலவும் இருக்கும். எதிரிகள் தொந்தரவு இருக்காது. ஒரு நிலை இல்லாமல் தவிப்பீர்கள். எந்த விஷயத்திலும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். டீச்சிங், மெடிக்கல், பேங்கிங் செக்டரில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். 

சனி பரிகாரம், ஆஞ்சநேயர் பூஜை, குல குருவிற்கு மரியாதை மிகவும் நன்மை செய்யும்.

தனுசு 


தடங்கல் நிறைத்த மாதம். ஆனால் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் முன்னேறுவீர்கள். லாங் டேர்ம் பிளானிங் செய்தால் நல்லது. வேலை மாற்றம், டிரான்ஸ்ஃபர் விஷயங்களுக்காக வைட் செய்தவர்களுக்கு கூட் நியூஸ். உங்கள் ஸ்ரத்தை, நேர்மை, நல்ல குணத்திற்கு எல்லாம் நல்ல படியாக மாறும். தாம்பத்திய உறவில் அன்பு, பரிவு, புரிந்துகொள்ளுதல் இருக்கும். காதல் ஜோடிகள் என்ஜாய் செய்யலாம். டேட்டிங் விஷயத்திற்கும் நல்ல டைம்.பரிவாரக சுகம், அன்பு நிறைய இருக்கு, கிடைக்கவும் செய்யும். வேலையில் அந்தஸ்து உயரும், பண வருவாய் அதிகரிக்கும். 

கட்டுப்பாடு மிகவும் அவசியம். சனிக்கு என்ணை தீபம் ஏற்றுங்கள்.

மகரம் 


பரிவாராக சுகம், வேலையில் நிம்மதி, உற்றார் உறவினர் நட்பு, நண்பர்களின் ஆதரவு எல்லாம் வாழ்க்கையில் ஒரே இன்ப மயம், மகர ராசிகாரர்களே. பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் எக்ஸ்ட்ரா எஃப்போர்ட்ஸ் கொடுக்க வேண்டி வரும். பணிவாகவும், மரியாதையாகவும் எல்லோரிடமும் இருந்தால், லைஃப் ரொம்ப ஸ்மூத் ஆக இருக்கும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும், திறமை அதிகரிக்கும், புத்தி கூர்மையாகும், வாக்கு சாதுர்யம், பேச்சில் மதுரம் இருக்கும். இது உங்களுக்கு ரொம்பவே நல்லது செய்யும். லாபம், பண வருவாய் அதிகரிக்கும். எதிரிகள் அடக்கி வாசிப்பார்கள். 

காயத்ரி மந்திரம் படியுங்கள். காலையில் விஷ்ணு பூஜை செய்யுங்கள்.

கும்பம் 


நீங்கள் நினைத்ததற்கு விஷயம் வேறு விதமாக மாறலாம். லக் மட்டும் போறாது. கடினமாக, மும்முரமாக உழைப்பு தேவை. வொர்க் ப்லேஸிலும் குடும்பத்திலும் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். பார்த்து கொள்ளுங்கள். நிதானமாக, அமைதியாக விஷயத்தை சால்வ் செய்யுங்கள். பண வருவாய் அதிகரிக்கும். கடனும் வாங்குவீர்கள். சேமிக்கவும் செய்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும். குடும்பத்தில் எல்லோரும் கொஆப்ரெட் செய்வார்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ளவேண்டாம். 

செவ்வாய் கிழமை விரதம் மேற்கொள்ளவும். தான, தர்ம கார்யங்கள் மூலம் பரிகாரம் செய்யவும்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில், உங்கள் திறமை ஓங்கும், எல்லோரூம் மதிப்பார்கள், போற்றுவார்கள். கலை,சங்கீதம், இலக்கியம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் நிறைய இருக்கும். சிலர் உங்கள் மீது பொறாமை கொண்டு பழி சுமத்துவார்கள். ஜாக்கிரதியாகவும் டைராயமாகவும் விஷயத்தை ஹேன்டில் செய்யவும். காதல் விவகாரத்தில் ப்ராப்ளேம் வராமல் பார்த்துக்கணும். இன்வெஸ்ட் பண்ணுகிறதிற்கு நல்ல நேரம் இல்லை. வெளி மனுஷர்கள் தலையீடு இருந்தால், ரொம்பவே மெதுவாக ஆனால் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லவும். நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்,சேமிப்பீர்கள். தான தர்மத்தில் செலவும் செய்வீர்கள். உடல் ஆரோகியதில் கவனம் தேவை. 

சனீஸ்வரனுக்கு ப்ரீதீ செய்யுங்கள். என்னை விளக்கு சனி கிழமை தோறும் அரச மரத்திற்கடியில் ஏற்றவும்.
Read More »

தீபாவளி ஸ்பெஷல் - 50% வரை தள்ளுபடி இரத்தினம், ருத்ராக்ஷம் மற்றும் யந்திரங்களில்.

ஆஸ்ட்ரோசேஜ்.காம் தரப்பிலிருந்து ஒரு சிறப்பு தள்ளுபடி, விஷேஷ தீபாவளி பண்டிகையில் மட்டும். எங்கள் உயர்ந்த ரக சாதனங்கள், பொருள்களை உபயோகித்து, பூஜை செய்து மகா கணபதி, மஹா லட்சுமி கடாக்ஷம் பெறலாம்.


Read More »

செப்டம்பர் 2016 ராசி பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த செப்டம்பர் 2016 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்


மேஷம்


குரு பகவான் ஆறாவது வீட்டிலும், சனி பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. மாதத்தின் முற்பகுதியில் க்ரஹணம் ஐந்தாவது வீட்டில் நடப்பதால், உங்கள் ஆரோக்கியதிற்கும், குழந்தைகளின் நலனுக்கும் நல்லது இல்லை. மன உளைச்சல், டென்ஷன் அதிகமாக இருக்கும் பண விரயம், தாம்பத்திய உறவில் க்லேஷம், குடும்ப உறவில் குழப்பம், குழந்தைகள் பக்கத்திலிருந்து பிடிவாதம், எதிர்ப்பு என்று நிறைய சிக்கல்கள் இருகின்றன. மாதத்தின் பிற்பகுதியில் ராசி நாதன் செவ்வாயும் சுக்ரனும் சிறிது பலம் பெற்று கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள். பொறுமையாக இருந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். கோவத்தில் எந்த டிஸிஷனும் எடுக்காதீர்கள்.

சனி குருவிற்கு ப்ரீத்தி செய்யுங்கள். அன்ன தானம், தீப தானம் , பெரியோர்களின் ஆசீர்வாதம் நன்மை தரும். சரஸ்வதி தேவிக்கு ஆராதனை செய்யுங்கள்.

ரிஷபம்


குரு பகவான் ஐந்தில் நல்ல கண்டிஷனில் இருந்தால் கூட, சிம்மத்தில் நடக்கிற கிரஹணத்தினால் வீட்டில் குழப்பம், பணி செய்யும் இடத்தில க்லேஷம் மேலதிகாரியின் அதிருப்தி போன்ற விஷயங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பெரிய தொகை கடனாக வாங்காதீர்கள். எந்த முடிவும் கோவத்திலோ ஆத்திரத்திலோ எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில மிக கவனமாக இருங்கள். யாரோடும் அதிகமாக பேச்சு-வார்த்தை வைத்து கொள்ளவேண்டாம், மிஸ்-கம்யூநிகேஷென் ஆக சான்ஸ் ஜாஸ்தி இருக்கிறது.குடும்பத்தில் சில சமயம் நிம்மதி நிலவினாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது மனது அலை பாயும்.உங்கள் லக்கில் மட்டும் டிபென்ட் ஆகாமல், உங்கள் அனுபவத்தையும், அனுமானத்தையும் பிரயோகத்தில் கொண்டு வாருங்கள்.

மஹா விஷ்ணுவிற்கும் மஹா லட்சுமிக்கும் பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் போல் கோவிலில் அரிசி, நெய், வெல்லம், பருப்பு வகையறாக்கள், தேங்காய் , ஊதுபத்தி, தீபம், தூபம், கற்பூரம் போன்றவைகளை தானம் செய்யுங்கள். ரேஷ் டிரைவிங் அவாய்ட் செய்யுங்கள்.

மிதுனம்


வேலை பார்க்கும் இடத்தில் கோவத்தை குறையுங்கள். தைரியமாகவும் சாதுர்யமாகவும் வேலையில் உள்ள தடங்கல்களை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வியாபாரத்தில் கடன் சம்பந்தமான விஷயங்களை பார்த்து ஹேன்டில் செய்யுங்கள். பண வருவாய், லாபம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் படு வேகமாக வ்ருத்தி அடையும். அதனால், எவ்வளவு சேமிப்பு செய்ய வேண்டுமோ, செய்யுங்கள். இன்பக்கேளிக்கையிலும் பொழுதுபோக்கிலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நம்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு கொடுக்கும். காதல் விவகாரத்தில் யோசித்து முடிவு எடுங்கள். நீங்கள் சொல்லும் சொல் ரொம்ப கடினமாகவும் முள் மாதிரி குத்தும். உங்கள் உறவிலும், நட்பிலும் இது ப்ராப்ளேம் உண்டு பண்ணலாம். பிஸினஸுக்கு இது உகந்த நேரம். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்திலும், உங்கள் குழந்தையின் நலனிலும் அக்கறை காட்டுங்கள்.

அஷ்டதாதுவில் (எட்டு உலோக கலவை) தயாரித்த ப்ரேஸ்லட் போட்டுக்கொள்ளுங்கள். ராஹுவுக்கு இது தான் சரியான பரிகாரம்.

கடகம்


இந்த மாதம் முழுவதும் நீங்கள் எனெர்ஜிடிக் ஆக இருப்பீர்கள். எந்தவிதமான விவாதத்தையும் அறவோடு தவிர்க்கவும். பார்ட்னெர்ஷிப்பில் லாபம் உண்டு. முன் செய்த வேலையின் பலன் இப்பொழுது கிடைக்கும். கார்யக்ஷேத்திரத்தில் பொறுப்புகள் ஜாஸ்தி ஆகும் விருத்தியும் உண்டாகும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் கவலை தரும். உறவுகளில் டென்ஷேன் நிலவும். பார்த்து மேனேஜ் செய்தால் நிம்மதி உங்களுக்கு தான்.

வியாபாரத்தில் லாபம் நிச்சயம், ஆனால் பெரும்பாடுபட்ட பின்பு தான். தைரியமாக சில முடிவுகள் எடுத்தால், உங்கள் அந்தஸ்தில் நல்ல மாற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும். ஹெல்த் விஷயத்தில் எதுக்கும் ஹார்ட் செக்-அப் செய்து பாருங்கள். மற்றபடி அதிகம் கவலை பட வேண்டாம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீங்கள் உங்கள் மற்ற வாழ்க்கை ஸமாஜாராம் பிரச்னையை சமாளிக்க முடியும்.

கணேஷ சங்கு வையுங்கள். உங்கள் பாரிவாராக, சமூக, வர்த்தக, மானசீக, ஆரோக்கிய விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ஸிம்ஹம்


இந்த மாதம் உங்கள் குடும்ப சம்பந்தங்கள், பிசினெஸ் பார்ட்னெர்ஷிப் பாதை மேலும் கீழும் செல்லும். வேலை செய்யும் இடத்தில் ஆதரவும் சஹயோகம் கிடைக்கும். நீங்கள் பேசும் தோரணையை கொஞ்சம் மெதுவாகவும் வார்த்தைகளை இனிப்பாகவும் வைத்துக்கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை நீங்கள் குறைக்கலாம். இது நீங்கள் வியாபாரத்தை விரிவு செய்ய உதவியாக இருக்கும். குடும்ப உறவுகளில் உங்கள் அன்பும் வளைந்து கொடுக்கிற தன்மையும் தான் உறவுகளை பாதுகாக்க உதவும். தன்னம்பிக்கையோடு உங்கள் பென்டிங் வேலைகளை செய்து முடியுங்கள். எல்லா விஷயத்திலும் பாஸிடிவ் ஆக யோசியுங்கள். அனுபவமுள்ளவர்களின் உதவி எல்லா விதத்திலும் நல்லது செய்யும். வரவும் செலவும் சரியாக இருக்கும். உங்கள் கோவம், ஆத்திரம் எல்லாவற்றையும் குறைத்து கொண்டால் நிலைமை கட்டாயம் மாறும். வொர்க்-லைஃப் பேலன்ஸ் மெய்ன்டேன் பண்ணனும்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டு வட-கிழக்கு திசையை பார்த்து வைத்து பூஜை செய்யுங்கள்.

கன்னி


நிலைமை கொஞ்சம் செட்டில் இல்லாத மாதிரி இருக்கும். உங்களை நீங்களே அனலைஸ் செய்து, நிலைமையை வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மாற்ற முயலுங்கள். உங்கள் புத்தி கூர்மையும் வாக்கு சாதூர்யமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு நல்வழி காட்டும். பண வரவு பன்மடங்கு உயரும். நிறைய பொறுப்பும் கடினமாக உழைப்பும் மேல்கொள்ளுவீர்கள். தாம்பத்திய உறவில் உல்லாசமும் அனுசரித்து போகும் குணமும் நிறைந்து இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் காதல் மலரும். சிலர் மண வாழ்க்கையில் கால் எடுத்து வைப்பார்கள். ஆன்மீகம், தார்மீகம் போன்ற விஷயங்களில் உங்கள் கவனம் திரும்பும், ஆர்வம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவும் பதவி உயர்வும் அதிகரிக்கும். இத்தனை நாள் பிளான் செய்தவை இப்பொழுது நடக்கும். உங்கள் மொத்த கான்செண்ட்ரேஷென் செய்யும் வேலையில் இருக்கிறது ரொம்பவும் சிறப்பானது. இந்த குணம் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு போகும். ஹெல்த் விஷயத்தில் நீங்கள் சற்று நிதானமாகவும் கவனமாகவும் இருக்கணும். நெல்லிக்காய் கலந்த ஆயுர்வேத மருந்து உங்களுக்கு நல்லது செய்யும்.

கௌரி ஷங்கர ருத்திராக்ஷம் அணியலாம். குழந்தை ஆசை உள்ளவர்கள் சந்தான கோபால மந்திரம் ஜபிக்கலாம்.

துலா


இந்த மாதம் சொந்த தொழில் பிசினெஸ் செய்பவர்களுக்கு நல்ல நேரம். லக் உங்கள் பக்கம் இருக்கிறது, உங்களுக்கு கூடுதலான நன்மையும் கிடைக்கும். ஆனால் எந்த விஷயத்திலும் கவலை படாமல் காரியமே கண்ணாக இருங்கள். பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். வறட்டு கௌரவம் பார்க்காதீர்கள். இல்லையென்றால் வேலை செய்யும் இடத்தில் உறவுகளில் கசப்பு தன்மை இருக்கும். சில நாள்கள் கடுமையான டென்ஷன் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக இருங்கள். உற்றார் உறவினர், குடும்பத்தினரிடம் மென்மையாக பழகுங்கள், கருத்து வேறுபாடு இருந்தால் பார்த்து மேனேஜ் பண்ணவும். வாதம், விவாதம் இதிலிருந்து தூர ஓடவும். உடல் ஆரோக்கியம் இந்த மாதம் மிகவும் முக்கியம். எலும்பு நோய், கண் நோய் போன்றவற்றிலிருந்து தப்பவும்.

யோக அப்யாசம், தியானம் முதலியவை நிம்மதி கொடுக்கும். ஃப்ங்க் ஷ்வே, வாஸ்து போன்றவற்றினால், வீட்டில் நல்ல வைப்ரேஷன்ஸ் கொண்டு வாருங்கள்.

விருச்சிகம்


இந்த மாதம் நீங்கள் புதிய முயற்சியில் இறங்குவீர்கள். கலை, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் பிரபலம் ஆவீர்கள். உங்கள் அந்தஸ்து சமூகத்தில் பன்மடங்கு உயரும். கம்பியூட்டர், அழகு சாதனங்கள், வஸ்திரம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கொஞ்சம் குழப்பம் நிலவும். குழந்தைகள் விவகாரம் மனதில் சஞ்சலம் உண்டு பண்ணும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் கவலை தரும். பிரயாணம் செய்கிற பொழுது நிதானமாக செயல் படவும். உங்கள் பர்சனல் உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். பாரிவாரிக சுகம் இப்ப இல்லை. மனம் அலைபாயும். உடல் உபாதைகளும் கூடவே இருக்கும். ஜாக்கிரதையாக கையாளுங்கள். வீண் சண்டை, உட் பூசல்களிலிருந்து தூர இருங்கள். மாத கடைசியில் பண வருவாய் மிகவும் பலமாக இருக்கும். ப்ரமோஷன் பற்றின விஷயங்கள் சூடு பிடிக்கும். இன்வெஸ்ட்மென்ட் செய்கிரத்திற்கு இது நல்ல நேரம்.

சனி கோவிலில் எண்ணெய், எள், உளுத்தம் பருப்பு, கருப்பு வண்ண வஸ்திரம் போன்றவை தானம் செய்யவும். ஏழை எளியோர்களுக்கு அன்ன தானம் பண்ணுங்கள். சுந்தர காண்டம் படிக்கலாம். காகத்திற்கு ஒரு வாய் எடுத்து வைத்து பின்பு சாப்பிடவும்.

தனுசு

உங்கள் கார்ய க்ஷேத்ரத்தில் முன்னேறுகிறதிற்கு தைர்யமாக கால் எடுத்து வையுங்கள். தன லாபம், திருப்தி உண்டாகும். வொர்க் லோட் அதிகரித்தாலும், கூடவே பண வருவாயும் ஜாஸ்தி ஆகும். உங்கள் தீர்மானங்களை ஸ்மார்ட்டாக ஆனால் உடனே எடுங்கள். பெரியோர்களின் ஆதரவு இருக்கிறது. குடும்பத்தில் கிலேசம் உண்டாகும். பார்த்து மேனேஜ் செய்யவும். எல்லோரிடமும் ஜாக்கிரதையாக பேசவும், பழகவும். செலவுகளில் மீது ஒரு கண் வையுங்கள். வாகனம், தங்கம், வீடு, மனை போன்ற விஷயங்களுக்கு இப்பொழு நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பிசினெஸில் இருக்கிறவர்கள் வளம் காண்பார்கள். வேலை பொறுப்புகள் காரணமாக ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம். நன்றாக காய்கறி பழவகையறாக்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளவும், ஜங்க் ஃபுட் கட்டாயம் அவாய்ட் பண்ணுங்கள் .

வீட்டில் நித்திய பூஜை ஆராதனை செய்யுங்கள். வேண்டாத மரச்சாமான்கள் தலையை சுற்றி தூர எறியுங்கள்.

மகரம்


பிசினெஸ் செய்கிறவர்களுக்கு இது உகந்த நேரம். எதிர் பாராத விதமாக லாபம் தேடி வரும். குடும்ப, தாம்பத்திய உறவுகளில் அன்பு, அரவணைப்பு இருக்கும். கோவம், ஆவேசம் போன்ற குணங்களை அறவே ஒழித்திடுங்கள். அலைபாயும் மனதை கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்கள் விருப்பம் போல் சில விஷயங்கள், வீட்டு மனுஷர்கள் நடக்க வில்லை என்றால் கவலை வேண்டாம். சாமர்த்தியமாக டீல் செய்யுங்கள். ஈகோவை விட்டு விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். ப்ரொபேர்ட்டி சம்பந்த விஷயங்களில் டாகுமெண்ட்ஸ் சரியாக உள்ளதா என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை பாருங்கள். எதிரிகள், முன் பின் தெரியாதவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தால் நன்றாக இருக்கும்.

ஆஞ்சநேயரை முழுமனதாக பூஜியுங்கள். உங்கள் மிகவும் நல்லது.

கும்பம்


இந்த மாதம் மீடியா, ஆர்ட்ஸ் சம்பந்த விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும். கொஞ்சம் டைம் எடுத்து கொண்டு ஏழை எளியோர்களுக்கு சேவை, தானம் செய்யுங்கள். உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும். மனதை கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள். உணர்ச்சி வசப்படாமல் யோசியுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவணும் என்றால், எல்லோரையும் சுற்றுலா/பிரயாணம் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். வரவு செலவு சமமாக இருக்கும். புதிதாக கார்யம் ஒன்றும் ஆரம்பிக்க வேண்டாம். உங்கள் கடினமான உழைப்பிற்கு நன்றாக பலன் கிடைக்கும். ஸ்டாக் மார்க்கெட்டில் இருந்து திடீர் பண வரவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் மிகவும் அவசியம். யோகா, மெடிடேஷன் உங்களை படு ஆக்டிவ் ஆக்கி விடும்.

கணேஷ ஸ்துதி சொல்லுங்கள். தான தார்மத்தில் மனதை செலுத்துங்கள். சனி வார உபவாசம் மேற்கொள்ளுங்கள். நன்மை தரும்.

மீனம்


பெரியோர்களின் போதனை, அட்வைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள். உங்கள்ளுக்கு நல்லது. வீடு மனை வாங்குவீர்கள் அல்லது விற்பீர்கள். கெட்ட சகவாசம், கெட்ட பழக்க வழக்கங்களிடம் இருந்து தள்ளி இருங்கள். முன் பின் அறியாதவர்களிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள். காதல் ஜோடிகளுக்கு பிரமாதமான நேரம். ஆன்மீகம், தத்துவம் போன்ற விஷயங்கள் உங்களை கவரும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருங்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சிலர் வாழ்க்கையில் மங்களகரமான கார்யங்கள் நடக்கும். ஆரோகியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சர்வ கார்ய சித்தி யந்திரம் வீட்டில் வைத்து பூஜை செயுங்கள். எல்லா விஷயத்திலும் மேலும் மேலும் நன்மை உண்டாகும்.
Read More »

ஸ்ரீ ஜெயந்தி சலுகை: 40 சதவீதம் வரை தள்ளுபடி ரத்தினம், ருத்ராக்ஷம், யந்திரம், இவைகளில்

இந்த சலுகை 26 ஆகஸ்ட் 2016 வரை. இதில் உங்களுக்கு ஆஸ்ட்ரோசேஜ் பொருள்களில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் இங்கு நல்ல தரமான ரத்தினம், ருத்ராக்ஷம், மூலிகை, யந்திரம் போன்றவைகளை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Janmashtamiyin 40% varai tallupadi AstroSagil mattume

Read More »

வரலக்ஷ்மி விரதம் - முஹுர்தம் மற்றும் பூஜை முறை

வரம் தரும் மஹாலக்ஷ்மி நம் எல்லோருக்கும் வரலட்சுமி ஆவாள். வரலக்ஷ்மி வ்ரத பூஜை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி (ஆடி மாதம் / ஸ்ரவண மாதம்) கடைப்பிடிக்கப்படும். இந்த வ்ரதபூஜை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் பின்பற்றப்படுகிறது. ஆவணி பௌர்ணமி முன் வரும் சுக்ல பக்ஷ வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். 

முஹுர்தம்



  • ஸிம்ஹ லக்ன பூஜா முஹுர்தம் = காலை 06:17 முதல் 08:20 வரை
  • விருச்சிக லக்ன பூஜா முஹுர்தம் = மத்யானம் 12:28 முதல் 14:40 வரை 
  • கும்ப லக்ன பூஜா முஹுர்தம் = வரலக்ஷ்மி விரதம்
  • வ்ருஷப லக்ன பூஜா முஹுர்தம் = ராத்ரி 23:50 முதல் 25:52+ வரை 

வரலக்ஷ்மி விரதம்


வரலட்சுமி விரதம் கல்யாணம் ஆன பெண்மணிகள், சுமங்கலிகள் மேற்கொள்ளுவார்கள். இவர்கள் தமது குடும்ப நலனுக்காக மகாலட்சுமியிடம் வரம் கேட்டு, விரதம் இருந்து பூஜை செய்வார்கள். அஷ்ட ஐஸ்வர்யங்களை வரமாக கொடுக்கும் தேவியே வரலக்ஷ்மியாக கருதப்படுகிறாள். அன்பு, செல்வம், சக்தி, சாந்தி, நிலம், புகழ், இன்பம், ஞானம் போன்றவைகள் தான் நமது வாழ்க்கையில் அஷ்ட ஐஸ்வர்யங்களாக இருந்து ஆசீர்வாதம் தருகின்றன. 

இந்த விரதத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. ஈஸ்வரனும் ஈஸ்வரியும் விளையாட, அவர்கள் நடுவில் யார் ஜெயித்தவர் என்ற போட்டி எழ, சித்ரநேமி என்கிற கணன் சிவனுக்கு வெற்றி அறிவிக்க, பார்வதி தேவியால் அந்த கணன் சபிக்கப்பட்டான். சிவனின் கோரிக்கைக்கு செவிகொடுத்து ஈஸ்வரி தன் சாபத்தை மாற்றினாள். அதன்படி, சித்ரநேமி பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி வ்ரதம் அனுசரிக்கப்படும் பொழுது அதில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து, சாப விமோசனம் பெற்றான். 

மற்றொரு கதை சாருமதியின் பக்தி, சிரத்தையுடன் கூடிய மஹா லட்சுமி பூஜையை பற்றி விளக்குகிறது. சாருமதி தன் கணவன், குழந்தைகள் மற்றும் எல்லா குடும்பத்தினர் நலனுக்கு செய்யும் பிரார்த்தனையினால் பிரசன்னமடைந்த மஹா லட்சுமி, சாருமதியின் கனவில் வந்து வரலக்ஷ்மி பூஜை செய்து அதிக வரம் பெற வழி கூறினாள். அதன்படி சாருமதி வரலக்ஷ்மி பூஜை செய்து மற்றவர்களையும் ஊக்குவித்தாள். சாருமதி நகரில் இருக்கும் எல்லோரும் வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு, பூஜை செய்து, தேவியின் ஆசீர்வாதம் பெற்றனர்.

வரலக்ஷ்மி பூஜை விதிகளில் உள்ள விஷேஷம் என்ன வென்றால், உலோகத்தினால் ஆன கலசம் மஹா லட்சுமியாக அலங்கரிக்கப்படும். இந்த கலசத்தில் பச்சை அரிசி, மஞ்சள், ஏலக்காய், லவங்கம், துளசி, பாக்கு போன்றவைகள் நிரப்பி, இந்த கலசத்தை மாவிலையால் கட்டி,இதன் மேல் மஞ்சள் பூசப்பட்ட அம்மன் முகம் குங்குமத்தோடு ஜ்வலிக்கும். இந்த அம்மனுக்கு பட்டு புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள், ஆபூஷணங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்காரம் செய்து பூஜையில் வரலக்ஷ்மி ரூபத்தில் ஸ்தாபனம் செய்வார்கள். தேவிக்கு தாம்பூலம் சமர்ப்பித்து, உபசார பூஜை செய்து, நைவேத்தியம் அர்ப்பணித்து ஸ்தோத்திரம் பாடி குடும்ப ஸ்திரீகள் மகிழ்வார்கள். 

நைவேத்தியத்தில் பல வகையராக்கள் படைக்கப்படும். இவை பக்ஷண வர்க்கங்கள், பழங்கள், மற்றும் சுவையாகவும் ருசியாகவும் தயாரிக்க பட்ட பண்டங்கள் ஆகும்:

  • சக்கரை பொங்கல், பாயசம், பஞ்ச அம்ருதம், வெண் பொங்கல்.
  • வடை, அப்பம்
  • சுண்டல் 
  • தேங்காய், வாழைப்பழம், மாதுளம் பழம் மற்றும் பல பழ வகையாக்கள்
  • உலர்ந்த பழங்கள் 

மேல்கூறியவை யாவும் தோரணம், கோலம், புஷ்பங்கள் போன்றவையால் அலங்கரிக்க பட்ட பூஜா பீடத்தில், விளக்கு பூஜை, கண்டா பூஜை மற்றும் ஸ்லோகங்கள், அர்ச்சனைகளால் ஆராதனை செய்யப்பட்ட தேவிக்கு அற்பிக்கப்படும். லட்சுமி சஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், மஹா லட்சுமி அஷ்டகம், மஹாலக்ஷ்மி கவசம் மற்றும் மந்திரங்கள் ஜபித்து சந்த்யா காலத்தில் ஆரத்தி எடுப்பார்கள். வரலக்ஷ்மியிடம் குடும்ப நலன், செல்வம், ஆரோக்கியம், அறிவு, நிம்மதி வரமாக வேண்டி ஆசீர்வாதம் பெறுவார்கள். விரதம் வைத்த குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் விருந்தினர்கள் பிரசாதத்தை உண்டு களித்து தேவியின் அருள் பெறுவார்கள். மறுநாள் புனர்பூஜை செய்து கலசத்தை நகற்றி வைத்து வரலக்ஷ்மி பூஜையை நிறைவு செய்வார்கள். 

நீங்களும் வரலக்ஷ்மி பூஜை செய்து தேவி அருள் பெற்று வாழ்க்கையில் வளம் காணுங்கள். 

வரலக்ஷ்மி விரதம் பலன்களை அதிகரிக்க மஹாலக்ஷ்மி பூஜையில் ஸ்ரீ யந்திரம், மஹா லட்சுமி யந்திரம், பாதரசம் ஸ்ரீ யந்திரம் மற்றும் தாமரை விதைகளால் கோர்க்கப்பட்ட ஜெபமாலை உபயோகிக்கவும். இந்த பொருள்களை நீங்கள் ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் சென்று, கட்டணம் கட்டி, ஆர்டர் செய்யலாம். 

உங்களுக்கு வரலக்ஷ்மி விரதம் நல் வாழ்த்துக்கள்.
Read More »

நாக பஞ்சமி - சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்யலாம், வாருங்கள்!

நாக பஞ்சமி


ஆகஸ்ட் 7

முஹூர்த்தம்: 06:17:15 முதல் 08:51:57 வரை ஐ.எஸ்.டி.

உங்கள் நகரத்தின் முஹூர்த்தம் அறிவதற்கு, இங்கு க்ளிக் செய்யுங்கள்: நகர முஹூர்த்தம்

இந்த வருட நாக பஞ்சமி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும். இது வளர்பிறை / ஷுக்ல பக்ஷத்தில் கடைபிடிக்கப்படும். சிவ பக்தர்களும் சக்தியை வழிபடுகிறவர்களும் இதை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். நாக பஞ்சமியை அனுஷ்டிப்பதால் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்திலிருந்து முக்தி கிடைக்கும். 

மஹாதேவர் நாக லோகத்தையும் ஆள்கிறவர். இவரை பூஜிப்பதால் நமக்கு நாகர்களின் சாபத்திருந்தும் தோஷத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். கட்டாயம் தோஷத்தின் தாக்கம் குறையவே செய்யும். 

நமது இந்திய ஜோதிடத்தில் நாக தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் போன்ற சொற்கள் நிறைய வரும். இதன் அர்த்தம் என்னவென்றால், முற்காலம் அல்லது முந்திய ஜென்மத்தில் மனிதர்களினால் சர்பங்களுக்கு ஏதாவது கொடுமை அல்லது வேண்டாதவை நடந்திருக்குமானால், அதன் பிரதி பலன் இந்த ஜென்ம கர்மாவாக வந்து நமது ஜாதகத்தில் ஒரு தோஷத்தின் ரூபமாக வரும்.

சர்ப்ப தோஷம் நமது ஜாதகத்தில் எப்படி காணப்படும்? எல்லா கிரஹங்களும் ராஹு கேதுவிற்கு மத்தியில் இருக்குமானால் ஜோதிடர்கள் அந்த நிலையை கால சர்ப்ப தோஷம் என்று குறிப்பிடுவார்கள். 

ராஹுவும் கேதுவும் சர்பங்களாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு கோள்களுக்கு நடுவில் மற்ற கோள்களான சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்கிரன், மற்றும் சனி இருக்கும் பட்சத்தில் ஒரு கஷ்டமாந யோகம் உருவாகிறது. இதை கஷ்டம் என்று ஏன் சொல்கிறோம் என்றால், இதன் காரணமாக ஜாதகருக்கு நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கும். யோகம் என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்த கோள்களின் நிலை மற்றும் இந்த நிலை காரணமாக தோன்றும் கஷ்டங்கள் மற்றும் இந்த கஷ்டங்களுக்கு அப்பால் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல விஷயங்களை குறிப்பதற்காக யோகம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். 

கால சர்ப்ப தோஷம் எந்த விதத்தில் மனிதர்களை பாதிக்கும்? 

  • படிப்பில் விக்னம் 
  • காரியத்தில் விக்னம் 
  • வேலை கிடைப்பதில் விக்னம் 
  • வேலையில் அதிருப்தி 
  • வேலை இழப்பு 
  • திருமணத்தில் விக்னம் 
  • மணவாழ்க்கையில் அதிருப்தி மற்றும் மணவாழ்க்கை தோல்வி அடைதல் 
  • விவாகரத்து அல்லது பிரிவினை 
  • குழந்தை பிறப்பதில் விக்னம் 
  • ஒரு காரியமும் நிறைவு அடையா பட்சத்தில் மன அதிருப்தி, நிம்மதி இழப்பு 

கிரஹங்களின் மற்ற நிலை முன்னிட்டு மேல் சொல்லப்பட்டவையின் தாக்கம் குறையவோ அல்லது மேலாகவோ இருக்கலாம். ஜோதிடர்களின் குறிப்பு என்ன வென்றால் 35 வயதிற்கப்புறம் இந்த தோஷத்தின் தாக்கம் முடிவு பெற்று நல்ல விஷயமும் சமாசாரமும் நடக்க ஆரம்பிக்கும். 

சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரமாகவும் ராஹு கேதுவிற்கு ப்ரீத்தி, சாந்தி செய்யவும் இந்த நாக பஞ்சமிக்கு மகத்துவம், முக்கியத்துவம் நமது மதத்தில், கலாசாரத்தில் கொடுக்க பட்டுள்ளது.

இந்த திதியில் பாம்பின் புற்றிற்கு பால் வார்ப்பார்கள். மஹா தேவருக்கு உபசார பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் போன்ற மரியாதைகள் ஆலயத்தில் நடைபெறும். சக்தியை பூஜிப்பவர்கள் ஆலயத்தில் அம்மனுக்கு வேண்டிய உபசார பூஜை, அபிஷேகம், அர்ச்சனை போன்ற மரியாதைகள் செய்து தேவியின் ஆசீர்வாதம், அருள் பெறுவார்கள். பாம்பின் புற்றில் பால் வார்க்கும் முறை சூர்ய அஸ்தம் முன் செய்து முடிக்க வேண்டும். 

நாக பஞ்சமி அன்று செய்யும் பூஜையும் பரிகாரமும் சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் நல்ல பலன்களை கொடுக்கவும் பெரிய அளவில் உதவி செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. பலர் இந்த பரிகாரங்களினால் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை சந்தித்து இருக்கிறார்கள். நீங்களும் நமது முன்னோர்கள் கற்று கொடுத்த சில நல்ல விதி முறைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நிறைவும் பெறலாம். 

நாக பஞ்சமியன்று கால சர்ப்ப யந்திரம், நவகிரஹ யந்திரம் போன்ற யந்திரங்களை ஸ்தாபித்து பூஜை செய்து அருள், வளம் பெறலாம். இது சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தை குறைக்கவும் உதவும். சிவ லிங்க பூஜை செய்தும் மஹாதேவரின் அருள் பெறலாம். ருத்திராக்ஷ மாலை அணிந்து ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்யலாம். 

ஆஸ்ட்ரோசேஜ் தளத்தில் உள்ள அங்காடியில் உங்களுக்கு வேண்டிய யந்திரங்களும், மாலைகளும், மற்ற பொருள்களும் கிடைக்கும். கால சர்ப்ப யந்திரம், மஹா ம்ருத்யுஞ்சய யந்திரம், பாதரசம் சிவ லிங்கம், ராஹு யந்திரம், கேது யந்திரம், எட்டு முகி ருத்ராக்ஷம், ஒன்பது முகி ருத்ராக்ஷம் இவற்றை உபயோகித்து இந்த தோஷ நிவர்த்தி செய்யுங்கள்.

லிங்கில் கிளிக் செய்து பயன் அடையுங்கள். 

மஹா தேவரிடம் சரண் அடையலாம், வாருங்கள்! 

நாக பஞ்சமியின் நல் வாழ்த்துக்கள்.

நன்றி. வணக்கம்.
Read More »

ஆகஸ்ட் 2016 மாத ராசி பலன்

ஆஸ்ட்ரோசேஜ் தரப்பிலிருந்து உங்களுக்கு ஆகஸ்ட் 2016 ராசி பலனை அளிக்கிறோம். ஆகஸ்ட் மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர், மற்றும் பிரியமானவர்களுக்கும், சார்ந்தவர்களுக்கும் எப்படி இருக்கும் என்று படித்து பாருங்கள்.



2 ஆகஸ்ட் 2016அமாவாசை
14 ஆகஸ்ட் 2016ஏகாதசி
18 ஆகஸ்ட் 2016பௌர்ணமி
28 ஆகஸ்ட் 2016ஏகாதசி

மேஷம் 


குரு பகவான் ஆறாவது வீட்டில் பெயர்ச்சி செய்கிறார். இந்த வருட குரு கோசாரம் நன்மை செய்யாது. அஷ்டம சனியில் பிடியில் இருக்கும் நீங்கள் இப்பொழுது வாழ்க்கையின் திருப்புமுனையில் இருக்கிறீர்கள். கொஞ்சம் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் கெடும். மன நிம்மதி இருக்காது. குழந்தைகள் பக்கத்திலிருந்து எதிர்ப்பு, டென்ஷன், கொள்கை வேறுபாடு இருக்கும். சமாளியுங்கள் எவரிடமும் தர்க்கம் வாக்கு வாதம் வேண்டாம். செய்யும் வேலையில் கவனத்தை திருப்புங்கள். இங்கு தான் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வு, பாராட்டு, பண வரவு சந்தோஷம் கொடுக்கும். பொறுப்புகள் ஜாஸ்தி ஆகும். கடன் வாங்காதீர்கள்; கொடுக்காதீர்கள். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். புது உறவுகளில் பார்த்து நடந்து கொள்ளவும். எதிரிகளின் கை ஓங்கும். கோவத்தை கட்டு படுத்துங்கள். உங்கள் அலைபாயும் மனதை படைப்பாற்றலில் செலுத்துங்கள். சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருங்கள். மருத்துவ செலவுகள் எதிர்பாராமல் வரலாம்.

பட்சிகளுக்கு தான்யம் போடுங்கள். குரு பகவானுக்கும் சனி பகவானுக்கும் ப்ரீதி பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். 

ரிஷபம் 


குரு பகவான் ஐந்தாவது இடத்தில் இந்த மாதம் பெயர்ச்சி செய்கிறார். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். குழந்தைகளுக்காக நீங்கள் செய்து வந்த முயற்சிகள் இப்பொழுது வெற்றி பெரும். கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நாலாவது இடத்தில் ராஹுவும் புதனும் சேர்ந்து கோசாரம் செய்வதால், தவறான எண்ணம், தப்பான கருத்து, தப்பாக புரிந்து கொள்ளுதல், போன்ற விஷயங்களிருந்து ஜாக்கிரதையாக இருங்கள். மேல் அதிகாரிகள், சக பணியாளர்கள் இவர்களுடன் நீங்கள் கொஞ்சன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி வரும். வாதம், விவாதம் இரண்டு விஷயத்திலும் கூடுதல் கவனமாக இருங்கள். டீம் மேனேஜ்மென்ட் ரொம்ப அவசியம். பூர்வீக சொத்து உங்கள் கை வரும். ஆனால் இன்வெஸ்ட்மென்ட் விஷயத்தில் இந்த சமயம் சரி இல்லை. குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்து கொள்ளுங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். கட்டாயம் சுகம் உண்டு. பண வரவு சீராக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் வர வேண்டிய லாபம் வரும். 

ஏழு முகி ருத்ராக்ஷம் அணியுங்கள். ஆஞ்சநேயரை பூஜை செய்யுங்கள். சனி கிழமையில் அரச மரத்திற்கு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்.

மிதுனம் 


இந்த மாதம் காரியத்தில் கண்ணாக இருந்து செய்ய வேண்டிய கார்யங்களை முடிப்பீர்கள். வேலை சம்பந்தமாக பிரயாணம் செய்ய வேண்டி வரும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாராத லாபம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வரவு செலவை பார்த்து சமாளியுங்கள். அதே சமயம், மேல் அதிகாரிகள், சக பணியாளர்கள் இவர்களிடம் படு கவனமாக டீல் பண்ணணும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்; பொறுப்புகளை நன்றாக மேனேஜ் செய்வீர்கள். வீடு ரேனோவேஷென், புதுபித்தல் போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்கும். ஆனால் புதிய ப்ரோபெர்ட்டி சம்பந்தமாக தீர்மானம் / முடிவு இப்பொழுது எடுக்க வேண்டாம். தகப்பனாரின் ஆரோக்யத்தில் முக்கியத்துவம் கொடுங்கள். வரவு செலவின் மேல் ஒரு கண் வைப்பது நல்லது. 

ஏழு முகி ருத்ராக்ஷம் அணிவதன் மூலம் சனி ப்ரீதி செய்யலாம். 

கடகம் 


உடல் ஆரோகியத்தில் மிக அதிக கவனம் தேவை. மனதும் அலைபாயும். அனாவசியமான ஸ்டெரெஸ் அல்லது டென்ஷென் எடுத்துகொள்ளவேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில் படு உஷாராக இருக்கணும். செய்யும் பணியில் ஃபோகஸ் செய்து, முக்கிய வேலைகளை பொறுப்பாகவும் புத்தி சாதுர்யதுடனும் செய்து முடியுங்கள். தன் கையே தனக்குதவி என்பதை மனதில் வைத்துகொள்ளலாம்.வியாபாரிகளுக்கு நல்ல நேரம். நவீன நுட்பங்களை பிரயோகம் செய்து வியாபாரத்தை விரிவு படுத்தலாம். மாத பிற்பகுதியில் உங்கள் அலுவலகத்தில் உள்ள மேல் அதிகாரிகளிடம் உங்கள் உறவு முறையில் முன்னேற்றம் காண்பீர்கள்.குடும்ப நலனில் அக்கறை காட்டுங்கள். உறவுகளில் சம்பந்தங்களில் தகராரும் குடும்பத்தில் குழப்பமும் உங்கள் மனதில் சங்கடம் செய்யும்.சேமிப்பு திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கும். சிலர் வேலை மாற்றம் செய்வார்கள். வேறு சிலருக்கு செய்யும் வேலையில் புதிய பொறுப்புகள், அமைப்பில் மாற்றம் காணலாம். கடன் வாங்குவதில்,,கொடுப்பதில் ரொம்ப கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோகியத்தில், நலனில் அக்கறை காட்டுங்கள்.

குரு, ப்ரஹஸ்பதி யந்திரம் வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்யவும். எதிரி, கடன், வியாதி தொல்லைகளில் இருந்து முடிவு கிடைக்கும். பாக்கியம் பிரகாசிக்கும். 

சிம்ஹம் 


மாதத்தின் முற்பகுதியில் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்களும் ப்ரச்சனைகளும் கூடும். சிலருக்கு வேலை மாற்றம் செய்ய நல்ல தருணம். உங்களுடைய பொறுப்புகளும் அதிகாரமும் கூடவே வ்ருத்தி அடையும். மேலதிகாரிகளின், உடன் பணியாற்றுபவர்களின் மார்க்க தர்ஷனம், உதவி உங்களுக்கு நன்மை தரும். எல்லா விஷயத்திலும் உங்கள் மிகச்சிறந்த முயற்சிகளை நீங்கள் தர வேண்டி வரும்.சிலர் வெளிநாட்டு பிரயாணம் செய்வார்கள். உங்களுடைய செலவுகள் ஜாஸ்தி ஆகவும் ப்ளான் செய்த வேலைகள் தாமதமாகவும் இருக்கும். கவலை வேண்டாம். திறமையும், புத்தியும் உபயோகித்து வாழ்க்கையில் முன்னேறவும். மற்றவர்களை நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் நீங்கள் செய்யும் வேலை கொஞ்சம் தாமதமாக இருக்கும். உங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் நீங்கள் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்கிறது நல்லது. உங்கள் குடும்பத்தில் இப்பொழுது நிலைமை சரி இல்லை. தாம்பத்திய உறவில் பொறுமை அவசியம். குழந்தைகள் ஆதரவு, இன்பம் தருவார்கள். புது உறவு நன்மை தரும், நீடிக்கும், மன நிறைவு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மன ஆரோகியத்தில் தியானம் செலுத்தவும். கோவத்தை குறைக்கவும். தனிப்பட்ட உறவு முறையில், கார்ய க்ஷேத்ரத்தில் இருக்கும் உளைச்சல், அழுத்தம் காரணமாக உங்கள் நிம்மதியும் பேலேன்சும் கெடும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

ராஹு, சனி பரிகாரம் நிம்மதி அளிக்கும். பவழம் அணியலாம்.

கன்னி 


குரு உங்கள் ஜன்ம ராசியில் கோசாரம் செய்கிறார். ராஹு 12 வீட்டில் இருக்கிறார். டென்ஷேன் கொஞ்ச நாள் நீடிக்கும், ஆனால் குறைவாக இருக்கும். நிதானமாக இருங்கள். உங்களுக்கு வரவேண்டிய பாராட்டும் புகழும் வந்து சேரும். வியாபாரம் விரிவு அடையும். வேலை பளு அதிகம் ஆகும். பிரமோஷென் விஷயங்களுக்கு இது ஒரு நல்ல நேரம் வீடு,சொத்து விவஹாரத்திற்கு டைம் சரியாக உள்ளது. குழந்தைகள் தொந்தரவு கொஞ்சம் ஜாஸ்தி ஆகும், ஜாக்கிரதையாக கையாளவும். எல்லோரிடையும் அனுகூலமாக பழகவும், நிதானமாக இருக்கவும். உங்கள் குரலை இனிமையாகவும், பேசும் தோரணையை சுமுகமாகவும் ஆக்கவும். தாம்பத்திய உறவு சுமுகமாக இருக்கும். கலை, சங்கீதம் போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இத்தனை நாள் வாழ்கையை என்ஜாய் செய்தீர்களானால் இப்பொழுது கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்ண வேண்டி வரும். குடிபழக்கம் போதை மருந்து, ஸ்மோகிங் போன்றவற்றிலிருந்து தூர இருங்கள்.

கௌரி சங்கர ருத்ராக்ஷம் சிவ லிங்கத்தில் ஸ்பர்ஷம் செய்து வடக்கு திசையை நோக்கி அணியலாம். 

துலா 


சனீஸ்வரன் இரண்டாம் வீட்டிலும் குரு பகவான் பன்னிரண்டிலும் சஞ்சரிப்பதால், மன உளைச்சல் ஜாஸ்தியாகவும் மன நிம்மதி குறையவும் செய்யும். எதிரிகளின் கை ஓங்கும். உங்கள் வேலையில் கவனமாக இருந்து விஷயத்தை நிதானமாக ஆராயுங்கள். ஸ்ட்ரெஸ் எடுத்துகொள்வதினால் அனாவசியமாக உங்கள் ஆரோக்கியம் தான் கெடும். உடல் மன ஆரோகியத்தில் கவனம் மிக மிக அவசியம். எந்த காரியமும் நிதானமாகவும், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செய்து முடியுங்கள். கூட வேலை செய்பவர்களிடம் சற்று உஷாராக இருந்து பழகுங்கள். எதுவும் டிசைட் செய்கிரதிற்கு முன்பு இரண்டு தடவை யோசிக்கவும். சொத்து, பணம் சம்பந்த பட்ட விஷயங்களில் சிறப்பான நேரமில்லை. இன்வெஸ்ட்மென்ட் பார்த்து செய்யுங்கள். வியாபாரிகள், சொந்த தொழில் செய்பவர்கள் அதிக லாபம் எதிர் பார்க்க முடியாது. 

உறவுகள், சம்பந்தகளுக்கு இது சரியான சமயம் இல்லாததால் பேசுவதிலும் அணுகுமுறையிலும் மிக அதிகமாக நிதானம் தேவை. தாம்பத்திய உறவில் உங்கள் வாழ்கை துணையிடம் நிதானம் தவறினால், நிலைமை வேறு விதமாக மாறிவிடும். இது குடும்ப நலனுக்கு நல்லது இல்லை. 

இரண்டு முகி ருத்ராக்ஷத்தை, கங்கா ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈஸ்வரனுக்கு ஆராதனை, உபசார பூஜை, மந்த்ரம் ஜபித்து முடித்த பின் சிவ லிங்கத்தில் ஸ்பர்ஷம் செய்து கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து அணியலாம். 

வ்ருச்சிகம் 


இந்த மாதம், இரண்டு ஐந்து வீடுகளுக்கு அதிபதியான குரு பதினொன்றில் கோசாரம் செய்கிறார். இது நல்ல சமாஜாரம். சனி இன்னும் ஜன்ம ராசியில் வக்ரத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை அறிந்து நடந்து கொள்வது நல்லது. குருவின் கோசாரம் மனதிற்கு நிம்மதி தரும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். செய்யும் வேலையில் மாறுதல் இருக்கும். பொறுப்பு, கடமை ஜாஸ்தி ஆகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம். மேலதிகாரிகளிடம் நன்றாக பழகுங்கள். சக பணியாளர்களிடம் சப்போர்ட் எதிர் பார்க்கலாம். ஸ்டாக் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். இன்வெஸ்ட்மென்ட் செய்ய நல்ல நேரம் இல்லை. ப்ராபெர்ட்டி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், விவசாயம் போன்ற துறையில் இருக்கிறவர்கள் முனேற்றம் காணலாம். இட மாற்றம் வேண்டி காத்திருந்தவர்கள், இப்பொழுது தங்கள் இஷ்டம் போல் மாற்றம் காண்பார்கள். பிரயாணங்கள் கை கொடுக்கும். சிலர் வாழ்க்கையில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற மங்களகரமான விஷயங்கள் நடக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் ரொம்பவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டிய விஷயம். இதில் நிறைய கவனம் வேண்டும். 

செவ்வாய் யந்திரம், ம்ருத்யுன்ஜய யந்திரம் வைத்து பூஜை செய்யலாம். ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றலாம். சனி ஸ்தோத்ரம், கணபதி ஆராதனை, துர்கா ஷப்தஷடி நல்லது செய்யும். 

தனுசு 


உங்களுக்கு இப்பொழுது நல்ல நேரம். சுற்றுலா, உல்லாச பயணம் போன்ற விஷங்களில் மனது லயிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெயரும், பாராட்டும் புகழும் வந்து சேரும். ஆனால் கூட வேலை செய்யும் பணியாளர்களிடம் இருந்து நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கோவத்தை குறையுங்கள். வாழ்கை பன்மடங்கு இனிதாகும். குடும்ப பொறுப்புகள் காரணமாக லைஃப் ஹெக்டிக் ஆக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். தொட்டது பொன் ஆகும். பெயர், புகழ், லாபம் எல்லாம் உங்கள் திசையை நோக்கி ஓடி வரும். கடன் கொடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.உங்கள் கூர்மையான புத்தியினால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் உச்சத்தில் போவீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களை போற்றுவார்கள். ரத்த அழுத்தம், ஸ்கின் அல்லேர்ஜி போன்ற சாரீரக உபாதைகளை சரியான சமயத்தில் ட்ரீட் செய்யுங்கள்.

மகாலட்சுமிக்கு பூஜை ஆராதனை செய்யவும் பெரியோர்களுக்கு மரியாதை கொடுங்கள், வார்த்தைகளை அளந்து பேசுங்கள். எல்லா விதத்திலும் நன்மையாக இருக்கும். 

மகரம் 


உங்களுடைய முக்கால் வாசி கஷ்டங்கள் இந்த மாதம் முடிந்துவிடும். டென்ஷன் குறைந்த மாதிரி இருக்கும். வெற்றி உங்களை தேடி வரும். யார் பற்றியும் கவலை படாமல் உங்கள் வேலையை கவனியுங்கள். காதல் ஜோடிகளுக்கு இது உகந்த நேரம். ஆனால் தாம்பத்திய உறவில் கொஞ்சம் கவனமாக விஷயங்களை கையாளுங்கள்.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். சகோதரர் கூடபிரந்தோர் ஆதரவு கொடுப்பார்கள். நண்பர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். கல்யாணம் ஆகாதவர்களுக்கு மண வாழ்க்கையில் ஒரு நல்ல நேரம். பணி செய்யும் இடத்தில், எல்லோரிடமும் நயமாக பழகவும், ஆதரவாக இருக்கவும். சகஊழியர்களிடம் மிகவும் மென்மையாக இருங்கள். யாரிடமும் கடினமாக இருக்க வேண்டாம். மாணவர்கள் பாடுபடவேண்டும். அப்பொழு தான் முன்னேறுவார்கள். வேலையில் உயர்வான நிலை அடைவதற்கு இந்த மாதம் ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோன் மாதிரி. உடல் ஆரோகியத்தில் கவனம் செலுத்துக. 


எல்லோரிடமும் குறிப்பாக பெரியோர்களிடம் அன்பாக இருங்கள். நன்னடத்தை, நற்சொல், பணிவு, உயர்ந்த நோக்கம், தார்மிக சிந்தனை, தான தர்மம் உங்களுக்கு பேரின்பமும் பரமானந்தமும் கொடுக்கும். 

கும்பம் 


மாணவர்களுக்கு ஒரு முக்கியமான நேரம். இத்தனை நாள் கடினமாக உழைத்தது, இப்பொழுது கைகொடுக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகள் மூலம் ஊதிய உயர்வு, பணி உயர்வும் முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களின் ஸப்போர்ட் என்கரெஜ்மெண்ட் மனதிற்கு நிம்மதி தரும். ஹெல்த் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. தாம்பத்திய உறவில் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். வாதம், விவாதம், தர்க்கம் அவாயிட் பண்ணுங்கள். இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு இது நல்ல நேரம் இல்லை. ஆனால் எதிரிகள் அடங்கி இருப்பார்கள். வீட்டிலோ அல்லது பணி செய்யும் இடத்திலோ யாரையும் டாமினேட் செய்யாதீர்கள். குடும்பத்தில் உறுபினர்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். குழந்தைகள் வேலையில் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீக சொத்து, உடைமைகள் உங்களுக்கு வந்து சேரும். கடன் கொடுத்த பணம் திரும்பி வரும். வொர்க் லைஃப், பர்சனல் லைஃப் இரண்டிலும் பேலேன்ஸ் கொண்டு வர முயற்சியுங்கள். 

ஆஞ்சநேயருக்கு வெல்லம், பருப்பு கடலை செவ்வாய் சனி தோறும் நைவேத்யம் செய்யுங்கள். வீட்டில் கங்காஜலம் தெளியுங்கள்.

மீனம் 


வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகம் ஆகலாம். பதவி உயர்வு தடை படலாம். ஆனால் விஷயம் தலை மேல் போகாமல் நீங்கள் தான் கவனிக்கணும். வார்த்தைகளை ஜாகிரதையாக வெளியிடவும். எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள். வம்பு பேசுகிறவர்கள், நெகடிவ்வாக யோசிக்கிறவர்களை கண்டு தாரளமாக தூர ஓடலாம்.மேலதிகாரிகளிடம் மரியாதையாக இருந்தால் நல்லது. எங்கும் தனியாக செல்ல வேண்டாம்.இந்த மாதம் குடும்பத்தில் குழப்பம் அல்லது ப்ராப்ளம் இருந்தால் ரிஸால்வ் பண்ண பாருங்கள்.குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களிடம் நட்பு அல்லது சிநேகிதம் வைத்து கொள்ளாமல் பார்த்துகொள்ளவும்.நீண்ட நேரம் வொர்க் பண்ணினாலும் நடுவில் ப்ரேக் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தகுதிக்கு முடிந்த மாதிரி தான தர்மம் செய்யுங்கள். பட்சிகளுக்கு அன்னம் போடுங்கள். கோவத்தை குறையுங்கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள். எல்லாம் நன்றாக இருக்கும்.
Read More »