ஏப்ரல் 2017 ராசி-பலன்

உங்கள் மாத ராசி பலனை உடனே படித்து இந்த ஏப்ரல் 2017 எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும்


மேஷ ராசிக்காரர்களே, உங்கள் பலன்களை பற்றி அறியலாமா?

ஒன்பதாம் வீட்டு சனியின் மூலம் நீங்கள் ஏதாவது தார்மீக, ஆன்மீக யாத்திரை செய்யலாம்.உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் சிறிது விரக்தி ஏற்படலாம். ஆனால் தந்தையில் உடல் ஆரோகியதில் மிக அதிக கவனம் தேவை. வேலை சம்பந்தமாக நீங்கள் வெளியூர் பிரயாணம் செய்யலாம். ஐந்தாம் வீட்டு ராஹுவினால் குழந்தைகளுக்கு பிரச்னைகள் வரலாம்; அல்லது குழந்தைகளாலும் வரலாம். ஆறில் உள்ள குரு செய்யும் வேலையில் ப்ரமோஷன் தரும். சுப விரயம் உண்டாகும். கேதுவின் 11ஆம் வீடு சஞ்சாரம் தன லாபத்தை குறிக்கிறது. சுக்கிரன்-சூர்யன் 12இல் இருப்பது வாழ்க்கை துணையின் கார்ய க்ஷேத்திரத்தில் திடீர் என்று உதவலாம்.


சிகப்பு நிற ஆடைகளை நிறைய பிரயோகம் செய்யவும்.


ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் இந்த மாதம் என்ன எதிர்பார்க்கலாம்?

அஷ்டம சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள்; எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஐந்தில் உள்ள குரு மனதில் நிம்மதி கொடுக்கும்; குழந்தை ஆசை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும், அவர்களது ஆசை பூர்த்தி ஆகும். ராகுவின் 4ஆம் இட கோச்சாரம் குழப்பம் உண்டாக்கும்; மன கஷ்டம் கூட இருக்கும். தாயின் ஆரோகியத்திற்கு அசௌகரியம் ஏற்படலாம். சிலருக்கு வீடு மாற்றம் கூட இருக்கலாம். கேதுவின் 10ஆம் இட சஞ்சாரம் வேலை மாற்றம் கொடுக்கலாம். கூட வேலை செய்பவர்களிடம் அன்புடனும், மேல் அதிகாரிகளிடம் மரியாதையுடனும் நடந்து கொள்ளவும். புதன், செவ்வாய் 12இல் இருப்பதால் செலவு அதிகரிக்கலாம். சுக்கிரன்-சூர்யன் 11இல் பல விதத்தில் லாபம் கொடுக்கும். சமூகத்தில், வேலை செய்யும் இடத்தில் மரியாதை மற்றும் நல்ல பெயர் கட்டாயம் கிடைக்கும்.

உடலில் எந்த ரூபத்திலும் வெள்ளி அணிந்தால் நன்மை உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எந்த விதமாக இருக்கும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

சனியின் 7ஆம் வீட்டு சஞ்சாரம் காரணமாக தூர தேச பிரயாணம் செய்ய நேரிடலாம். பாக்கியம் கை கொடுக்கும். வாழ்க்கை துணைக்கு எதாவது பிரச்சனை வரலாம்; அல்லது உடல் ஆரோக்கியம் கெடலாம். வியாபாரத்தில் நல்ல திருப்பமோ மாற்றமோ வரலாம். ராகுவின் 3ஆம் வீட்டு கோச்சாரம் தைர்யம் தரும்; எடுத்த காரியத்தை முடிக்க உதவும். குருவின் 4ஆம் இட சஞ்சாரம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க உதவும். தாய்க்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஜாஸ்தி ஆகலாம். செய்யும் தொழிலில் விருத்தி உண்டாகும். கேதுவின் 9ஆம் இட சஞ்சாரம் உங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள உதவும். தந்தையின் ஆரோகியத்தில் கவனம் தேவை. சூர்யன்-சுக்கிரன் 10ஆம் இட சஞ்சாரம் உத்யோகத்தில் பெரிய பதவி வகிக்க வழி செய்யும். செவ்வாய்-புதன் 11இல் சேர்க்கை லாபத்தை காண்பிக்கிறது. நீங்கள் புது வீடு மற்றும் வாஹனம் வாங்கவும் நல்ல நேரம்.


பச்சை நிற பாட்டில் அல்லது மண் தொட்டியில் மனி பிளான்ட் வைத்தால் உங்களுக்கு நல்லது.

கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் எப்படி?

சனியின் ஆறாவது இட சஞ்சாரம் விரோதிகளை அடக்கும். உங்கள் கார்ய க்ஷேத்திரத்தில் நீங்கள் நன்றாக உழைத்து முன்னேறுவீர்கள். ராகு 2இல் இருப்பது கண் நோய், பண தட்டுப்பாடு போன்றவற்றிற்கு பிரச்னைகள் உண்டாக்கும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை; தப்பெண்ணம், தவறாக புரிதல் மூலம் வேற்றுமை உண்டாகும். எப்பவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். அவசர முதலீடு ஆபத்தில் முடியும். சிலருக்கு வேலை மூலம் பிரயாணம் இருக்கும்; சிலருக்கு வேலை மாற்றமும் இருக்கும். குருவின் 3இல் சஞ்சாரம் கூட பிரந்தோர்க்கு நல்லது செய்யும். வியாபாரத்தில் கடினமாக வேலை செய்தால், பான் மடங்கு லாபம், உயர்வு நிச்சயம். தாம்பத்திய உறவு சுமுகமாக இருக்கும். கேது 8இல் இருப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு உத்தமம். செய்யும் வேலையில் சன்மானம், மரியாதை நிச்சயம்.

தாய் சமான பெண்மணிகளிடம் அன்பாக இருங்கள்; வெள்ளி பொருள்கள் உபயோகியுங்கள். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு, என்ன மாதிரி பலன்கள் அமையும்?

சனி 5இல் குழந்தைகளுக்கு படிப்பிலோ, வேலையிலோ தொந்தரவு தரலாம். தாம்பத்திய வாழ்க்கை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் நல்ல நேரம். ராகு ஜென்மத்தில் இருப்பது மன சஞ்சலம் கொடுக்கும்; உடல் அசௌகர்யமும் வரலாம். கேதுவின் 7ஆம் வீட்டு கோச்சாரம் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் கிளப்பலாம்; அல்லது விரக்தி மனப்பான்மை ஏற்படுத்தலாம். குரு 2இல் இருப்பது குடும்பத்தில் அமைதி கொடுக்கும்; பண வருவாய் அதிகரித்தாலும் கூடவே செலவுகளும் இருக்கும். சூர்யன்-சுக்கிரன் 8இல் இருப்பது வேலையில் நிம்மதி குலைக்கும். புதன்-செவ்வாய் 9ஆம் வீட்டில் இருப்பது வீடு, மனை, வெளிநாட்டு பிரயாணம் போன்ற சுப யோகத்தை கொடுக்கும்.இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோகியத்தில் மிக அதிக கவனம் தேவை.

வீட்டின் கிழக்கு திசையில் சூர்யோதயம் முதல் சூர்யாஸ்தம் வரை ஜீரோ வாட் பல்ப் எரிய விட்டால் நன்மை உண்டாகும்.

கன்யா ராசிகர்களுக்கு என்ன நடக்குமென்று தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நான்கில் இருக்கும் சனி மனதின் அமைதி கெடுக்கும்; வீட்டில் பிரச்னைகள் அதிகரிக்கும்; குடும்ப நிம்மதி குலையும்; உடல் ஆரோக்கியம் கெடும். குருவின் ஜென்ம சஞ்சாரம் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். மனம் ஆன்மீகத்தில் லயித்து அமைதி காணலாம். குழந்தைகள் நன்றாக படித்து முன்னுக்கு வருவார்கள்; அவர்களுக்கு பிடித்த வேலையும் கிடைக்கும். ஆறில் உள்ள கேது எதிரிகளை அடக்கி வைத்தாலும், வேலையில் சக ஊழியர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருப்பது உங்களுக்கு தான் நல்லது. ஏழில் சூர்யன்-சுக்கிரன் காதலை ஊக்குவித்தாலும், தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல், பதற்றம் உண்டாக்கலாம். செவ்வாய்-புதன் 8இல் இருப்பது பல விதமான கஷ்டங்களை தரும் மற்றும் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களையோ செய்திகளையோ கொடுக்கும்.

துளசியை ஆராதனை செய்யுங்கள்; ப்ரஸாதமாய் உட்கொள்ளுங்கள்.

துலா ராசிக்காரர்களே, உங்கள் இந்த மாத பலன் என்ன சொல்கிறதென்று பார்ப்போமா?

இந்த மாத சனியின் 3ஆம் இட கோசாரம் உங்கள் சாகஸத்தை உயர்த்தும். நீங்கள் உங்கள் கார்ய-க்ஷேத்ரத்தில் கடினமாக உழைப்பீர்கள். ராகுவின் 11ஆம் இட சஞ்சாரம் பல விதங்களில் லாபத்தை தரும். ஷேர் பாஜார் மற்றும் லாட்டரியிலிருந்து தன லாபம் நிச்சயம். பெரிய சகோதரனின் உடல் ஆரோகியம் கெடலாம். குருவின் 12ஆம் வீட்டு கோச்சாரம் சுப விரயத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். வீட்டில் மங்களமான கார்யங்கள் நடக்கும். கேதுவின் 5ஆம் வீட்டு சஞ்சாரம் மந்த்ர சித்தி மற்றும் ஆன்மீகத்தில் ஊன்றி இருக்கிறவர்களுக்கு மிகவும் நல்லது செய்யும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறனை காமித்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். உங்கள் ஆற்றல், உற்சாகம் இந்த மாதம் உச்சத்தில்; உடல் ஆரோக்கியமாகவும், மனம் திடமாகவும் இருக்கும்.ஏழில் இருக்கும் செவ்வாய்-புதன் மூலம் வியாபாரத்தில் வளம் காணலாம். வாழ்க்கை துணைக்கு கோவம், ஆத்திரம் அதிகம் வரலாம். இதனால் தாம்பத்திய உறவில் அதிருப்தி நிலவும்.

கஷ்டப்படும் பெண்மணிகளுக்கு உதவி செய்யுங்கள்; உங்களுக்கு நல்லது.


விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு எப்படி என்று அறியலாமா?

இந்த மாதம் சனியின் சஞ்சாரம் 2ஆம் இடத்தில் நடக்கிறது. இதனால் இட மாற்றம் வரலாம். சிலருக்கு வீடு, மனை மூலம் லாபம் கிட்டும். குருவின் 11ஆம் வீட்டு சஞ்சாரம் பல வழிகளில் வருவாய் பெறுக உதவும். ஆர்ட்ஸ், மியூசிக், மெடிசின் போன்ற துறையில் இருக்கும் மாணவர்களுக்கு பிரகாசமான நேரம். ஆன்மீக விஷயங்களுக்கு இது நல்ல நேரம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ராகுவின் 10ஆம் இட சஞ்சாரம் செய்யும் வேலையில் பல மாற்றங்கள் கொண்டு வரலாம். சிலருக்கு வேலை மாற்றம் கூட இருக்கலாம். கேது 4இல் மன அமைதியை கலைக்கும். சிலர் வீடு-மனை விற்க நேரிடும். தாயின் ஆர்வம் ஆன்மீக, தார்மீக விஷயங்களில் அதிகரிக்கும். தாயின் உடல் நிலை கவலை கொடுக்கும். புதன்-செவ்வாய் 6இல் விரோதிகளை அடக்கும்; உடல் வலிமையையும் கொடுக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன்-சூர்யன் சேர்க்கை வியாபாரத்தில் பிரமாதமான லாபத்தை தரும். தாம்பத்திய வாழ்க்கை உல்லாசமாக இருக்கும்.

தாமிரம் அல்லது ஸ்வர்ணத்தால் ஆன நாணயம் உங்களிடம் எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள்.

தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு எப்படி பட்ட பலன் இருக்கிறது என்று பார்ப்போமா?

ஜென்ம சனி கடும் உழைப்புக்கு பிறகு ஊதிய உயர்வு மற்றும் வேலையில் நல்ல திருப்பம் ஏற்படுத்தும். நண்பர்களுடைய மற்றும் கூட பிறந்தோரின் சஹயோகமும், அன்பும் உங்களுக்கு நிச்சயம். ராகுவின் 9ஆம் இட சஞ்சாரம் தந்தையின் சுகாதாரத்திற்கு கெடுதல் செய்யும். நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்ளலாம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோகியத்தில் கவனம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். கேதுவின் 3ஆம் இடத்தில் இருப்பது உங்களை தைர்யசாலியாக ஆக்கும். குருவின் 10ஆம் இடத்தில் இருப்பது வேலையில் ஒரு உச்ச நிலை வகிக்க உதவும். சுக்கிரன்-சூர்யன் 4இல் இடமாற்றம் கொடுக்கலாம். ஒரு பெரிய, அழகிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். செவ்வாய்-புதன் 5இல் சேர்க்கை குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கும். காதல் ஜோடிகளுக்கு நல்ல நேரம் தான் இருந்தாலும் சின்ன விஷயங்களில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மஞ்சள் நிற துணி / கைக்குட்டை உபயோகிக்கவும்; அதிர்ஷ்டமாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம் எந்த விதமான ப்ரபாவத்தை கொண்டு வரும்?

சனி 12இல் இருப்பது செலவை அதிகரிக்கும். கண், கால் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். குரு 9இல் உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்தை அதிகமாக்கும்; புனித பயணமும் உண்டாகலாம். குழந்தைகளின் விஷயத்தில் திடீரென பிரமாதமான விஷயங்கள் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பிறக்கவும் நல்ல நேரம். கேதுவின் 2ஆம் இட சஞ்சாரம் திடீர் தன லாபம் அல்லது பண இழப்பு கொடுக்கும். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். ராகுவின் 8ஆம் இட கோசாரம் குடும்பத்தில் சொத்து சம்பந்த தகராறு தரும். கீழே விழுதல், அடி படுதல், தூக்கம் இல்லாமை போன்ற பிரச்னைகள் இருக்கும். தாயுடன் கருத்து வேறுபாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சூர்யன்-சுக்கிரன் 3ஆம் இட சஞ்சாரம் மேல் அதிகாரிகளிடம் மோதல் ஏற்படுத்தலாம். செவ்வாய்-புதன் 4இல் இருப்பது வீடு வாங்கும் யோகம் காண்பிக்கிறது.

பக்ஷிகளுக்கு தான்யம் போடுங்கள். நல்லது நடக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன் கிடைக்கும்?

சனி 11இல் உள்ளார். பல விதத்தில் லாபத்தை உண்டு பண்ணுவார். உடல் திடமாக இருக்கும். பெரிய சகோதர உறவு மூலம் உதவி நிச்சயம் கிடைக்கும். கேது ஜென்மத்தில் உங்களுக்கு ஆன்மீக ஞானம் கொடுக்கும். எப்பவும் கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. வீட்டில் உள்ள பெரியர்களிடமும் சிறியோர்களிடமும் அன்பாக இருங்கள். தாயின் சஹயோகம் பூரணமாக உங்களுக்கு தான். ராகு ஏழில் கணவன்-மனைவி உறவில் எதிர்பாராத பிரச்னைகள் கிளப்பி, போராட்டம் உண்டு பண்ணும். சூர்யன்-சுக்கிரன் 2இல் சேர்க்கை வருவாய் வேகமாக அதிகப்படுத்தும்; வியாபார வ்ருத்திக்கும் நல்லது. வெகுதூர பிரயாணத்தினால் நன்மை அடைவீர்கள். புதன்-செவ்வாய் சேர்க்கையில் 3இல் சகோதர சம்பந்தத்தில் விரிசல் காண்பிக்கிறது. டெக்னிகல் சம்பந்த படிப்பு தொடரும் மாணவர்கள் மிக வேகமாக முன்னேற்றம் காண்பார்கள்.


முறைப்படி தியானம் செய்தால் உங்களுக்கு ரொம்பவே நல்லது.


மீன ராசி நேயர்களே, வாருங்கள். உங்கள் இந்த மாத பலன் என்னவென்று பார்ப்போமா? 

இந்த மாதம் சனி 10இல் சஞ்சரிக்கிறார்; வேலையில் மாற்றம் இருக்கும்; வேலை மூலம் நீங்கள் விதேஷ பிரயாணம் செய்யலாம்; வீடு மாற்றமும் சாத்தியம். செய்யும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். தாம்பத்திய வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். ஆறில் இருக்கும் ராகு விரோதிகளை அறவோடு முடித்துவிடும். போட்டி, தேர்வு போன்ற விஷயங்களில் நீங்கள் உங்கள் திறனை நன்றாக காண்பிப்பீர்கள். குடும்பத்தில் டென்க்ஷன் நிலவும். குருவின் 7ஆம் வீட்டு கோச்சாரம் எல்லாவிதத்திலும் நன்மை செய்யும்; உடல் ஆரோக்கியம், மன திடம், தாம்பத்திய உறவில் நிம்மதி மற்றும் வாழ்க்கையில் உற்சாகம் போன்றவற்றிற்கு நல்லது. கூட பிறந்தோர், நண்பர்களுடன் சம்பந்தம் பிரமாதமாக இருக்கும். சூர்யன்-சுக்கிரன் ஜென்மத்தில் இருப்பது உடல் அசௌகரியம் கொடுக்கலாம். செவ்வாய்-புதன் 2ஆம் வீட்டு சேர்க்கை வியாபாரத்தில் லாபமும் தன விருத்தியும் கொடுக்கும். 


வயதானவர்களிடம் அன்புடனும் பணிவுடனும் இருங்கள். எல்லாம் சுபமாக இருக்கும்.

Related Articles:

No comments:

Post a Comment